தஞ்சை கடலில் மீன்வரத்து குறைவு 50,000 மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறி
Posted November 13, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சைமாவட்ட கடற்பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை புதுப்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபாவாசத்திரம் கள்ளிவயல்தோட்டம் பிள்ளையார்திடல் உள்ளிட்ட 37 மீன்பிடி கடற்கரை கிராமங்களில் மீன் பிடிக்கும் மீனவர்கள் சுமார் 50 ஆயிராத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில்லையை நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில் மிக குறைவாக மீன் அகப்படுவதால் மீனவர்கள் மிக ஏமாற்றத்துடன் கரை திரும்பிகின்றனர். இதனால் மீனவர்கள் தங்கள் அவர்களுக்கன தேவைகளை பூர்த்தி செய்ய முடியத நிலை ஏற்பட்டுவுள்ளது. இது தவிர மீன்பிடிக்கச் செல்லும் படகுகளுக்கு டீசல் மற்றும் நடைமுறை செலவுகளுக்கு தடுமாற்றம் ஏற்பட்டு மேலும் மீனவர்கள் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி காந்திநகர் மீனவர் நாகூர்பிச்சை கூறுகையில் கடல் பகுதில் பெரும்பாலும் கொடைகாலங்களில் மட்டும்தான் மீன் வரத்து குறைவாக காணப்படும். அதன் பின் புரட்டாசி மாதம் இறுதியில் இருந்து தைமாதம் இருதியில் வரை மீன் இனைபெருக்கம் அதிகமாய் வரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் நிலையில் அரேவே மீன் வரத்து இல்லாததால் மிக ஏமாற்றத்தையும் வேதனையும் தந்துவுள்ளது. நாங்கள் இரவு பகல் கண்விழித்து கடலில் வலையை விரித்த பிறகு எடுத்து பார்த்தால் ஒன்று இரண்டு மீன்கள் கிடப்பதை பார்க்கும் போது நேஞ்சமே பதருது இதனால் டீசல் செலவுக்கே மீன் அகப்படுவதில்லை இதனால் கடலுக்குசெல்லவே எங்களுக்கு விருப்பமே இல்லை மேலும் எப்போதும் வடக்கு திசைலிருந்து தெற்க்கு திசை நோக்கி கடலில் காற்று வீசினால் இலங்கை மற்றும் பிற கடற்பகுதிலிருந்து உள்ள மீன்கள் நம் கடற்பகுதிக்கு வரும் ஆனால் இந்த காற்று இத்தனை நாட்கள் வழக்கபோல் வீசும் காற்று வீச வி;ல்லை அதனால் மீன்வரத்து குறைவாக உள்ளது என்றார்.
0 comment(s) to... “தஞ்சை கடலில் மீன்வரத்து குறைவு 50,000 மீனவர்கள் வாழ்வாதாரம் கேள்வி குறி”