அதிரையில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்களின் பரிதாப நிலை

Posted November 20, 2016 by Adiraivanavil in Labels:
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றி திரியும்  மனநலம் பாதித்தவர்கள் கவனிப்பாரின்றி சுற்றித் திரிகின்றனர்.  அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க அரசு நேசக்கரம் நீட்டப்படுமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிராம்பட்டினம் பகுதிகளில் ஏராளமான மன நோயாளிகள் கவனிப்பாரின்றி சாலைகளில் சுற்றும் மனநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள கேரளா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகள் அதிராம்பட்டினத்தில்; அதிகம் திரிகின்றனர். இவர்கள்; பேரூந்து நிலையம் மட்டுமின்றி பல்வேறு பிரதான சாலைகளில் கையில் அழுக்கு மூட்டைகளுடன் சுற்றுகின்றனர். உணவகங்களில் கொட்டப்படும் கழிவுகள் அல்லது இரக்க முள்ள யாராவது வாங்கிக்கொடுக்கும் உணவை சாப்பிட்டும் வயிற்று பசியை போக்குகின்றனர். பல நாட்கள் உணவு தண்ணீர் இன்றி பட்டினியாக கழிக்கின்றனர். தாகம் எடுத்தால் சாலைகளில் தேங்கி கிடக்கும் கிருமி கலந்த நீரை குடிக்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை அறிய முடியாத நிலையில் உள்ளனர். 

 இதுகுறித்து சமூக ஆர்வலார் மரைக்கா இத்ரீஸ் அகமது கூறுகையில் 

அதிராம்பட்டினம் சாலைகளில் திரியும் மனநோயாளிகள் இவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது மன நோயாளிகளை உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வது அவசியமாகும். அதிராம்பட்டினம் பகுதியில்  மனநோயாளிகள் சுற்றித் திரிகின்றனர். அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்கப்படும் மன நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதனையடுத்து தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா வருபவர்களை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக வட மாநிலங்களில் மனநிலை பாதித்தவர்களை அவர்களது குடும்பத்தினரே ரயில்களில் அழைத்து வந்து பல்வேறு இடங்களில் இறக்கி விடும் அவலம் நடக்கிறது. இதனை கண்டுபிடித்து தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். மனநோய் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்கள் பொறுப்பாக காப்பகத்தில் சேர்க்க முன்வரவேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.




0 comment(s) to... “அதிரையில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்களின் பரிதாப நிலை”