அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில்; கராத்தே பயிற்சி வண்ண பட்டை வழங்கும் விழா
Posted November 15, 2016 by Adiraivanavil in Labels: பிரிலியண்ட் சிபிஎஸ்சி
அதிராம்பட்டினம்,நவ.15
அதிராம்பட்டினம் அருகில் உள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில்மாவட்ட அளவிலான கராத்தே பயிற்சி வண்ண பட்டை வழங்கும் விழா பள்ளி தாளாளர் சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. அறிவழகன் சிறப்புரையாற்றினார். இஷ்ன்ரியூ கராத்தே தலைமை பயிற்சியாளர் தயாளன்,சென்சாய் தலைமை பயிற்சியாளர் நாடிமுத்து இருவரும் சிறப்பு பயிற்சியளித்தனர்.விழாவில் 130 மாணவ,மாணவிகள் பங்குபெற்றனர்.பங்குபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பட்டயம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் சுப்பையன் செய்திருந்தார்.
படம் விளக்கம்
படம் 1 ;பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான கராத்தே பயிற்சி வண்ணப்பட்டை வழங்கும் விழாவில் பங்குபெற்ற மாணவர்கள்
0 comment(s) to... “அதிரை பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில்; கராத்தே பயிற்சி வண்ண பட்டை வழங்கும் விழா”