அதிரையில் கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்

Posted November 21, 2016 by Adiraivanavil in Labels:

 அதிராம்பட்டினம்,நவ.21

அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.ஏரிப்புறக்கரை கிராமம் மீனவர்கள் வசிக்கும் பகுதி.கடலிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ளது.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டுவந்தது.மேலும் கடல் உள் வாங்குவதும் கடல் நீர் பெருக்கடுப்பதும் தொடரந்து மாறி மாறி இருந்துவந்தது.ஒரு சில நேரங்களில் கடல் நீர் பெருக்கெடுக்கும் போது  படகுகளை நிறுத்திவைக்கும் துறைமுக வாய்க்காலில் தண்ணீர் நரம்பி வழியும் நிலைஇருந்தது.இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கடல் சீற்றம் அதிகமானதால் கடல் நீர் பெருக்கெடுத்து மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்தது.இதனால் ஏரிப்புறக்கரை கண்டியன்கொல்லை பகுதிக்குள் உள்ள கரிகாலன்,ராமசாமி,ரவி,பிரபாகரன் உள்ளிட்டவர்களின் வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது.இது பற்றி ஏரிப்புறக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலா கூறுகையில் ஒரு வார காலமாக கடலில் சீற்றம் இருந்துவந்தது.ஆனால் நேற்று அதிகாலை கடல் சீற்றம் அதிகமாகி கடல் நீர் 50க்கும் மேற்பட்ட வீடுகள் அடங்கிய கண்டியன்கொல்லையில் உள்ள 4 வீடுகளில் கடல் நீர் புகுந்துவிட்டது.அதிகாலை நேரத்தில் நன்கு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தண்ணீர் வீட்டுக்குள் வருவதைக்கண்டு உடனடியாக குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள கோவிலுக்குள் சென்று தங்கினர்.இதனால் அடுத்தடுத்த வீடுகளில் உள்ளவர்கள் தங்களது வீடுகளிலும் கடல் நீர் புகுந்துவிடுமோ என்று பயந்திருந்தனர்.பின்னர்  கடல் நீர் படிப்படியாக காலை 7 மணியளவில் கடல் உள்வாங்கியதால் வற்றியதையடுத்து இப்பகுதி மக்கள் நிம்மதியடைந்த என்றார்.இருந்தும் திடீரென கடல்சீற்றம் அதிகமாகி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த சம்பவத்தால் சுனாமி ஏதும் தாக்கக்கூடுமோ என்ற அச்சம் இப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.


பட விளக்கம்
அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது.இதனால் வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பான வேறு இடத்திற்கு செல்கின்றனர்.





0 comment(s) to... “அதிரையில் கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் வெளியேற்றம்”