அதிரையில் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக வியாபாரிகளுக்கு –வெயில்,மழை காக்கும் குடைகள்
Posted November 03, 2016 by Adiraivanavil in Labels: லயன்ஸ் சங்கம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சாலையோரம் வியாபாரிகளுக்கு வெயில் மற்றும் மழை காலங்களில் காக்கும் குடைகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் லயன்ஸ் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் தலைமையில் நடைபெற்றது. மண்டலச் செயலர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், மண்டல பொருளர் பட்டுக்கோட்டை ; ஸ்ரீராம் ஆகியோர் துவங்கி வைத்தனர். இதனையடுத்து அதிராம்பட்டினத்தில் பகுதியில் சாலையோரம் உள்ள அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் மார்க்கெட், போஸ்ட் ஆபீஸ் ரோடு, கடைத்தெரு வண்டிப்பேட்டை ஆகிய பகுதியில் உள்ள செறுப்பு தைக்கும் தொழிலாளி, பூ கட்டும் தொழிலாளி, காய்கறி வியாபாரம், பழ வியாபாரம், செய்யும் 25 கடைகளுக்கு வெயில்,மழையில் காக்கும் குடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ஜலிலா முகைதீன், பேராசிரியர் கணபதி, அகமது, சாகுல்ஹமிது, மற்றும் மூத்த லயன் உறுப்பினர்கள் ராமமூர்த்தி செல்வராஜ் அப்துல்ஹமிது ஆறுமுகசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன் சங்க பொருலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் செய்திருந்தனர்.
0 comment(s) to... “அதிரையில் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக வியாபாரிகளுக்கு –வெயில்,மழை காக்கும் குடைகள் ”