அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தர்ஹாவில் கந்தூரி விழா
Posted November 02, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம், நவ.3
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைதெருவில் உள்ள தர்ஹாவில் 577-வது ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நேற்று முன் தினம்; தர்ஹாவிலிருந்து அலங்கார பல்லக்கு ஆடும் ரதத்துடன் பலவகை காட்சிகளுடன் நகர்வலம் வந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம,; பழைய போஸ்ட் ஆபிஸ ரோடு,; பெரியமார்கெட், ஆகிய முக்கிய வீதிகள் வழியாக மேளவாத்தியங்கள் முழங்க அலங்கார பல்லாக்கு ஆடும் குதிரை ரதத்துடன் கந்தூரி ஊர்வலம் நடைபெற்றது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில்; ஏஎஸ்பி அரவிந்த்மேனன் மற்றும் டிஎஸ்பி செங்கமலகண்ணன் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள்,; உளவுத்துறை போலீஸர்கள் பாதுகாப்புபணியை மேற்கொண்டனர் ஊர்வலத்தில் முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தர்ஹாவில் கந்தூரி விழா”