அதிரை அருகே கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
Posted November 10, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் அருகே படகு பழுதானதால் கடலில் தத்தளித்த 4 மீனவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார்கள் மீட்டனர்.அதிராம்பட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த சேவியர் வயது 23 என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் இவரும் இதே ஊரைச் சேர்ந்த எட்வின் வயது19,ஜேசையா வயது 58 மற்றும் ஏரிப்புறக்கரையைச் சேர்ந்த ராஜீவ் வயது 26 ஆகிய நால்வரும் கொள்ளுக்காடு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து நேற்றைய முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.அப்போது கடலிலிருந்து 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்களின் படகு பழுதானது.இதனால் படகை செழுத்தமுடியாமல் நடுக்கடலில் நீண்ட நேரமாக தத்தளித்தனர்.பின்னர் மீனவர்கள் கடலோர பாதுகாப்புக்குழுமத்தின் அவசர தொலைபேசி எண் 1093 க்கு போன் செய்து தகவல் கொடுத்தனர்.இதையடுத்து பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக் குழும டிஎஸ்பி குமரவேல்,இன்ஸ்பெக்டர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தலைமையில் அதிராம்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர்,போட் எஸ்ஐ வில்வநாதன் ஆகியோர் அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலைய பைவ் டன் ரோந்துப்படகில் சென்று கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்டுக் கரை சேர்த்தனர்.
பட விளக்கம்
அதிராம்பட்டினம் அருகே படகு பழுதானதால் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்டுக் கரைக்கு கொண்டுவரும் கடலோர பாதுகாப்புக்குழும போலீஸார்கள்
0 comment(s) to... “அதிரை அருகே கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு”