அதிரை அருகேஅரசு மேல்நிலைப்பள்ளியில்; மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி முகாம்
Posted November 16, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம்.நவ.16
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்து உள்ள காசாங்காடு அரசு மேல்நிலை பள்ளியில்; மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., கவுன்சிலர்களுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இயங்கும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு மாணவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. காசாங்காடு அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த முகாமை, மாவட்ட கல்வி அலுவலர் க.வளர்மதி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட தலைமைச் இந்தியன் ரெட்கிராஸ் எஸ்.ராஜமாணிக்கம் இந்தியன் ரெட்கிராஸ் தஞ்சை மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தர் காசாங்காடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கு.பண்டியன் வரவேற்றார். பட்டுக்கோட்டை ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் பிச்சைமணி, கருணாகரன், சுரேஷ்குமார், ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதனையடுத்து மதுக்கூர் சுற்றிவுள்ள கிராமங்களில் உலக சுகாதார விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரிடர் மேலாண்மை பயிற்சியினை, பட்டுக்கோட்டை தீயணைப்பு துறை அலுவலர் மெல்சியுராஜா தலைமையிலான குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர். முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பட்டுக்கோட்டை அரவிந்த்மேனன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் தலைவர் மரைக்கா இத்ரிஸ் அகமது நன்றி கூறினார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்து உள்ள காசாங்காடு அரசு மேல்நிலை பள்ளியில்; மாவட்ட அளவிலான ஜே.ஆர்.சி., கவுன்சிலர்களுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இயங்கும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு மாணவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. காசாங்காடு அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த முகாமை, மாவட்ட கல்வி அலுவலர் க.வளர்மதி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட தலைமைச் இந்தியன் ரெட்கிராஸ் எஸ்.ராஜமாணிக்கம் இந்தியன் ரெட்கிராஸ் தஞ்சை மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தர் காசாங்காடு அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கு.பண்டியன் வரவேற்றார். பட்டுக்கோட்டை ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் பிச்சைமணி, கருணாகரன், சுரேஷ்குமார், ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதனையடுத்து மதுக்கூர் சுற்றிவுள்ள கிராமங்களில் உலக சுகாதார விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரிடர் மேலாண்மை பயிற்சியினை, பட்டுக்கோட்டை தீயணைப்பு துறை அலுவலர் மெல்சியுராஜா தலைமையிலான குழுவினர் செயல் விளக்கம் அளித்தனர். முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பட்டுக்கோட்டை அரவிந்த்மேனன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அதிராம்பட்டினம் இந்தியன் ரெட்கிராஸ் தலைவர் மரைக்கா இத்ரிஸ் அகமது நன்றி கூறினார்.
0 comment(s) to... “அதிரை அருகேஅரசு மேல்நிலைப்பள்ளியில்; மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி முகாம்”