அதிரையில் பயிர்கள் கரிகியதால் அதிர்ச்சியில் விவசாயி மரணம்

Posted November 23, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்,நவ.23
தஞ்சை மாவட்டம அதிராம்பட்டினத்தில் கடல் நீர்  விவசாய நிலங்களில் புகுந்து பயிர்கள் கரிகிய சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.அதிராம்பட்டினம் அருகில் உள்ள தம்பிக்கோட்டை வடகாடு செட்டிகுட்டை காலனி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் என்கிற நாராயணசாமி வயது 61.இவருக்கு கண்ணன்,ஐயப்பன் என்ற இரண்டு மகன்களும் மஞ்சுளா,சங்கீதா என்ற இரண்டு மகள்களும் உள்ள நிலையில் மனைவி முத்துலெட்சுமி, மகன் ஐயப்பன் மற்றும் இவரது மனைவி வித்யா ஆகியோரிடம் வசித்துவந்தார்.இந்நிலையில்  அந்த பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 45 தினங்களாக விவசாய பணிகளை செய்துவந்தார்.இதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் தெரிகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வயலை பார்த்துவிட்டு வருவதாகக்கூறி தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்று வயலைப்பார்த்துவிட்டு வீட்டுக்குத்திரும்பியவர் மிகவும் படபடப்புடனும் சோர்வுடனும் காணப்பட்டார்.இதையடுத்து மனைவி முத்துலெட்சுமி அவரிடம் விசாரித்தபோது பயிர்கள் கரிகிவிட்டதாகவும் வாங்கிய கடனை எப்படி திருப்பிக்கொடுக்கப்போகிறேன் என்று சொன்னவர் திடீரென மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து அவரை உடனடியாக முத்துப்பேட்டையிலுள்ள  தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரது உடல்நிலை மோசமாகவே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.இதையடுத்து  உடலை தம்பிக்கோட்டை வடகாடு அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.தகவலறிந்ததும் பட்டுக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன்,சிபிஎம் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் மனோகரன்,மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்க செயலாளர் சுப்ரமணியன்,சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் விவசாயி நாராயணசாமி வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
  
         தாசில்தாரிடம் விவசாயிகள் கோரிக்கை


பட்டுக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரனிடம் விவசாயிகள் சார்பாக காவிரி தஞ்சை கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜராமலிங்கம் கோரிக்கை வைத்தார்.இதில் தம்பிக்கோட்டை வடகாடு பழைய பாட்டுவனாச்சி கடல் கழிமுக வாய்க்கால் தூந்து போய் சம தரையாக உள்ளது.வாய்க்காலின் இருபுறமும் கரை அமைக்காததால் கடல் நீர் உட்புகுந்து வருடாவருடம் சுமார் 100 ஏக்கர் சாகுபடி நிலம் வீணாகிவிடுகிறது.இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்யும் ஏழை குத்தகை விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனவே கடல் நீர் உள்ளே வராமல் தடுக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.


0 comment(s) to... “அதிரையில் பயிர்கள் கரிகியதால் அதிர்ச்சியில் விவசாயி மரணம்”