அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
Posted November 05, 2016 by Adiraivanavil in Labels: லயன்ஸ் சங்கம்
அதிராம்பட்டினம், நவ-05
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் தலைமை தாங்கினார். செயலர் முத்துகிருஷ்ணன், பொருளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார். மண்டலச் செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100க்கும் மேற்ப்பட்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேரூராட்சி,; பள்ளிகள், கோயில்கள், சாலை ஓரங்கள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நடபட்ட கன்றுகளை பாதுகாக்க கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிராம்பட்டினம் பேரூராட்சியில்; உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் வீட்டுக்கொரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லை முடிவுப் பகுதியில் பொதுமக்களை வரவேற்று நன்றி தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன. இதில் இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மாவட்டத்தலைவர்கள் முஹம்மது முகைதீன், மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, சாகுல் ஹமீது, செல்வராஜ், எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், ஆஃப்ரின் நெய்னா முஹம்மது, சாரா அகமது, முன்னாள் உடனடித் தலைவர் ஆறுமுகச்சாமி, உறுப்பினர்கள் கே. இத்ரீஸ் அஹமது மைதீன், நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ”