அதிரையில்; 500 ரூபாய் நோட்டை மாற்ற பொதுமக்கள் அவதி - ஓர் பார்வை
Posted November 09, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம்,நவ.9
தஞ்சை மாவட்ட அதிராம்பட்னத்தில் ரூ.500, 1000 நோட்டுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி திடீ ரென அறிவித்தார். இதனையடுத்து நேற்று பொதுமக்கள் மளிகை கடைகள், ஹோட்டல்கள்;, மார்கெட், மெடிக்கல்கள், பெட்ரோல்பங், பழக்கடைகள் இது போன்ற கடைகளில் ரூ.500 கொடுத்தால் வாங்க மறுத்தனர். இந்நிலையில் ரூ.100 கொடுத்தால் மட்டுமே கடைகளில் பொருட்கள் கொடுக்கப்படும் என்று கடைக்காரர்கள் அனைவரும் தெரிவித்தனர். இதை போல் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களில் பொதுமக்கள் கடைக்காரர்களிடம்; வாக்கு வாதத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில்.
; கட்டிட தொழிலாளி சரவணன் கூறுகையில்
நான் நேற்று முன்தினம் வேலை பார்த்து ஒரு ரூ.500 மட்டுமே வைத்திருக்கிறோன்; தற்பேது சமையல் செய்வதற்க்கு காய்கறி வாங்க வந்தேன் ஆனால் ரூ.500-யை மாற்ற முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கேன் என்றார்
சமூக ஆர்வாலர் ஏவிஎம் வரிசை முகம்மது கூறுகையில்
பிரதமர் மோடி திடீ ரென அறிவித்ததை அடுத்து அதிராம்பட்டினத்தில் பணம் போடுவதற்காகவும் பணம் எடுப்பதற்கும். வங்கி ஏடி எம் மையங்களில் அலை மோதியது கூட்டம் இதனையடுத்து. ரூ.500, 1000 வைத்துள்ளவர்கள் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் போடுவதற்காக நேற்று முன்தினம் இரவு குவிந்தனர். இதனால் பல மையங்களில் கூட்டம் அலை மோதியது. ரூ.100 எடுப்பதற்க்கும் ஏராளமானோர் வங்கி ஏடி எம் மையம் முன்பு குவிந்தனர். இதனால் தள்ளு முள்ளு, நடைபெற்றது. என்றார்
அதிரை சிற்பி கூலி தொழிலாளி ராஜ் கூறுகையில்;
அதிராம்பட்டினத்தில்; ரூ.500 என்பது சாதாரண மக்கள் கூட வைத் துள்ளனர். இந்த சூழ்நிலையில் திடீரென ரூ.500 நோட்டுகள் மாற்ற முடியாது என கடைக்காரர்கள் கூறுவதால் பொது மக்கள் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர்கள்;. இதனால் இதையேடுத்து கடைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொது மக்கள் பலபேர் வாங்க முடியாமல் வீட்டிற்கு திரும்பி சென்றனர். எந்த விதகால அவகாசம் இல்லாமல் திடீ ரென ரூ.500 நோட்டுகள் செல்லாது எனக்கூறியதால் பொதுமக்கள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்கள். என்றார்
வாகன ஓட்டி சதாம்உசேன் கூறுகையில்
அதிராம்பட்டினம் பெட்ரோல் பங்கில் கூட்டம் குறைவாகதான் உள்ளது ஏன் என்றால் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறி விக்கப்பட்டுள்ளதால், தற்போது கடைகளில் சில்லறை கேட்டால் வாக்கு வாதத்தில் ஈடுபடும் நிலை உள்ளது. ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் கேட்டு சில்லறை கேட்டால் எங்கையும் கொடுப்பதில்லை. ஆனால், பெட்ரோல் பங்குகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லும் என அறிவித்துள்ளதால் பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல் போட்டால் சில்லறை மாற்றினர். என வாகன ஓட்டிகள் சென்றால் பெட்ரோல் பங்கில் ரூ.500க்கு முழுவதம் போடவா என்றார்கள் இதனால் வாகன ஓட்டிகள் மிக ஏமாற்றத்துடன் வருகின்றனர்.
0 comment(s) to... “அதிரையில்; 500 ரூபாய் நோட்டை மாற்ற பொதுமக்கள் அவதி - ஓர் பார்வை”