அதிராம்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அதிராம்பட்டினம்,நவ-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான சேதுரோடு முதல் காதர்முகைதீன் கல்லூரி வரையிலான கிழக்குகடற்கரை சாலை பகுதிகளில்; பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதி மன்ற உத்தரவையடுத்து. அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருவாய்துறை பொதுப்பணித்துறை காவல் துறை உள்ளிட்ட அதிகாரிகள்; ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றனர். அப்போது நில ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிடம் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், அதை குறிபிட்ட கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.; இதனையடுத்து நவ.28-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென கால கெடு நிர்ணயத்த நிலையில் சிலர் நேற்று முன்தினம் முதல் ஆக்கிரமிப்பு செய்து கட்டியுள்ள கட்டடங்களை ஊழியர்களை கொண்டு இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அவர் அவர்களே அகற்றிக் கொண்டனர். அகற்றபாடத ஆக்கிரமிப்புகளை பட்டுக்கோட்டை ஆர்.டி.ஒ கோவிந்தராசு ஏ.எஸ்.பி அரவிந்தமேனன் தாசில்தார் ரவிசந்திரன் மற்றும் பொதுபணிதுறை அதிகாரிகள் முன்னிலையில் அகற்றினார்கள்
அதிராம்பட்டினத்தில் இரண்டு திணங்களாக இறவு நேரத்தில் பணி மூட்டத்துடன் காணப்படுகிறது அதிராம்பட்டினம் பகுதியில் இரண்டு திணங்களாக இறவு 8 மணியில் இருந்து விடியற்காலை 5ந்து மணி வரை கடும் பணி மூட்டம் இருந்து வருகிறது இறவு நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் இரவு நேரத்தில் பணி மூட்டத்துடன் காணப்படுவதால் வாகணங்கள் மெதுவாக நகர்ந்து செல்கிறது இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கல் பணியால் ஹெல்மட் , மற்றும் பணி குல்லா அணிந்து செல்கின்றனர் மார்கழி மாதத்தில் பணி பொழிவது போல் கார்த்திகை மாதத்தில் மழை இல்லாமல் பணி பொழிந்து வருகிறது கடலுக்கு செல்லும் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் பணி பொழிவு அதிகமாக உள்ளதால் மழையில் நனைந்தது போல் பணி பொழிவால் நனைந்து விடுகின்றனர் என்று மீனவர்கள் கூறுகின்றனர் பணி பொழிவால் கடலில் குளிர்ந்த காற்று வீசிகிறது பணி பொழிவால் மீன் பிடித்துவிட்டு துறைமுகம் திரும்பும் மீனவர்கள் பணி பொழிவால் கலங்கரை விளக்கம் தெரியாமல் தாமதமாக துறைமுகம் வந்து அடைகின்றனர். பொது மக்கள் பணி பொழிவால் குளிர்ந்த காற்று வீசுவதால் சொட்டர் , போர்வை போத்தி உறங்குகின்றனர்
அதிராம்பட்டினம்,நவ.28
;கடந்த சில தினங்களாக ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பையடுத்து பணப்பரிமாற்றம் தடைபட்டதால் மீனவர்கள், மீன் வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.மேலும் மீனவர்கள் இரவு பகல் பாராது கஷ்டப்பட்டு பிடித்துவரும் மீன்களுக்கு உரிய விலைநிர்ணயிக்கப்படாமல் மிகக்குறைந்த விலைக்கே மீன்கள் வாங்கப்படுவதால் மீனவர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை என்ற நிலை கடந்த 20 தினங்களாக நடைபெற்றுவருகிறது.இந்நிலையில் மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் மாநில மீனவர் சங்க செயலாளரும் கல்லிவயல்தோட்டம் விசைப்படகு சங்கத்தலைவருமான தாஜீதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிப்பால் பணப்பரிமாற்றம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் மீன்களுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் இதனால் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இதையடுத்து தஞ்சை மாவட்ட கடல் பகுதியான சேதுபாவாசத்திரம்,மல்லிப்பட்டினம்,கல்லிவயல்தோட்டம் ஆகிய துறைமுகத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் இதன் மூலம் மீன்பிடிக்கும் 2000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லமாட்டார்கள்.இதனால் மீன்வரத்து குறைவதோடு மீன்களின் விலை பல மடங்கு உயரும் நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.
அதிராம்பட்டினம்,நவ.27
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றவேண்டு மென அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் தீர்மானம் நிறை வேற்றியது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை, அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத், அனைத்து இஸ்லாமிய இயக் கங்கள் சார்பில் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் அப்துர்ரஹ்மான் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த மத்திய அரசு முயலும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும். பள்ளி வாசல், தர்ஹாக்களில் பொருத்தப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கியை அகற்ற முயற்சி செய்யும் காவல் துறையின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் .காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ரூ.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன், தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை பொது செயலாளர் முஹம்மது ரிழா மற்றும் அதிராம்படடினம் இஸ்லாமியர்கள் உள்பட பல்வேறு இஸ்லாமிய இயக்கத்தினர் பலர் பங் கேற்றனர்.
அதிராம்பட்டினம்,நவ.27
அதிராம்பட்டினம் கரையூர் தெரு சந்தன மாரியம்மன் கோவிலில் ஐயப்பன் கோவில் செல்லும் குருசாமி மற்றும் ஐயப்பன் பக்கதர்களுக்கு பாதை பூஜை நிகழ்ச்சி நடந்தது. அதிராம்பட்டினம் கரையூர் சந்தன மாரியம்மன் கோவிலில், தெருவில் வசிக்கும் V.ராமசாமி என்பவர் 18-வது வருட ஐயப்பன் பக்தர் பூர்த்தி அடையும் நிலையில் அவர் சார்பில், நடத்திய பாதை பூஜையில் ஐயப்ப குருசாமிகள் ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர் இதனையடுத்து ஐயப்ப பக்தர்களை வரிசையாக நிற்க வைத்து, திருநீர், சந்தனம், குங்குமம் மற்றும் பூக்களால், பாதை பூஜை செய்யப்பட்டது. இதில் அதிராம்பட்டினத்தில் சுற்றிவுள்ள ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர், இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதிராம்பட்டினம் அருகே தி.மு.க பொருளாலர் மு.க ஸ்டாலின் தம்பிக்கோட்டை வடக்காடுக்கு சென்று இறந்து போன நாராயனசாமி உருவப்படத்திற்க்கு மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினார் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை வடக்காடு பகுதியை செர்ந்த விவசாயி நாராயனசாமி தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார் விவசாயத்திற்க்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் மனம் உடைந்து மாரடைப்பால் சென்ற 22ந் தேதி மரணம் அடைந்தார் இந்த செய்தி அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தன தி.மு.க பொருளாலர் மு.க.ஸ்டாலின் இறங்கள் தெரிவித்து இருந்தார் இந்தநிலையில் இறந்து போன நாராயனசாமி வீட்டிற்க்கு நேற்று அவரது மனைவி முத்துலச்சுமி யிடம் ருபாய் 100000 வழங்கினார் பின்னர் திருஉருவப்படத்திற்க்கு மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினார்
அதிராம்பட்டினம்,நவ.26
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள கனராவங்கியில் முறையாக பணம் வழங்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அதிராம்பட்டினம் கிழக்குக்கடற்கரைச் சாலையை ஒட்டி கனராவங்கியின் கிளை செயல்பட்டுவருகிறது.
இந்த வங்கி பல வருடங்களாக அதிராம்பட்டினத்தில் இயங்கி வருவதால் அதிகப்படியான பணப்பரிமாற்றம் நடைபெற்றுவருகிறது.இதனால் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.இந்நிலையில் மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவித்ததோடு குறிப்பிட்ட தொகையே பணம் எடுக்கமுடியும் என்ற அரசின் உத்தரவின்படி அனைத்து வங்கியிலும் குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்பட்டுவந்தது
.இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக இந்த வங்கியில் அரசு அறிவித்த குறிப்பிட்ட தொகை பணம் எடுக்கச் சென்றாலும் பணம் இருப்பில் இல்லை எனக்கூறி வங்கி ஊழயர்கள் திருப்பி அனுப்பிவிடுவதாகவும் ஏடிஎம் பல நாட்களாக பூட்டிக்கிடப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல பேங்குக்குச் சென்ற வாடிக்கையாளர்களை வங்கி ஊழியர்கள் திருப்பி அனுப்பியதோடு பணம் இருப்பில் இல்லை என்ற தகவல் பலகையையும் வைத்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் திடீரென கிழக்குக்கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் வங்கியை முற்றுகையிட்டு வங்கி ஊழியர்களிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தமாக மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் கூறுகையில்
எப்போது சென்றாலும் பணம் இல்லை என்று சொல்லி வங்கி மேலாளர் திருப்பி அனுப்பிவிடுகிறார்.இதனால் ஏழை மக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.இப்படி இருக்கையில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் எப்போதும் பணம் கொடுத்தனுப்புவது எந்தவிதத்தில் நியாயம் அவர்களுக்கு மட்டும் பணம் எப்படி வருகிறது. பாரபட்சமாகசெயல்படும் வங்கி மேலாளரின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்றார்.இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் கிழக்குக்கடற்கரைச்சாலையில் போக்குவரத்து 2 மணி நேரம் தடைபட்டது.பின்னர் அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் அவர்களிடத்தில் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தைநடத்தியதையடுத்து ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு பின்னர் பணம் வழங்கப்பட்டது. இதையடுத்து சாலைமறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பட விளக்கம்
அதிராம்பட்டினம் கிழக்குக்கடற்கரைச்சாலையில் வங்கியில் பணம் வழங்காததைக்கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினத்தில் சங்க கூட்ட அரங்கில் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இளைஞர் அமைப்பின் தலைவர் S.அஹமது அனஸ் தலைமை தாங்கினார். துணைதலைவர்
K.மரைக்கா இத்ரிஸ் அகமது செயலாளர் M.F.சலீம் இணைசெயலாளர் Z.முஹம்மது தம்பி பொருலாளர் A.சேக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எதிர் வரும் டிசம்பர் மாதம் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நடத்துவது குறித்து தீர்மானங்கள் மற்றும்
பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் வரும் 26-11-2016 அன்று சனி கிழமை மாலை-5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் திராளக கலந்து கொள்வதற்கான முன்ஏற்பாடு குறித்தும் தீர்மானங்கள் நடைபெற்றது.
அதிராம்பட்டினம்,நவ.23
தஞ்சை மாவட்டம அதிராம்பட்டினத்தில் கடல் நீர் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்கள் கரிகிய சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.அதிராம்பட்டினம் அருகில் உள்ள தம்பிக்கோட்டை வடகாடு செட்டிகுட்டை காலனி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் என்கிற நாராயணசாமி வயது 61.இவருக்கு கண்ணன்,ஐயப்பன் என்ற இரண்டு மகன்களும் மஞ்சுளா,சங்கீதா என்ற இரண்டு மகள்களும் உள்ள நிலையில் மனைவி முத்துலெட்சுமி, மகன் ஐயப்பன் மற்றும் இவரது மனைவி வித்யா ஆகியோரிடம் வசித்துவந்தார்.இந்நிலையில் அந்த பகுதியில் இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 45 தினங்களாக விவசாய பணிகளை செய்துவந்தார்.இதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும் தெரிகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வயலை பார்த்துவிட்டு வருவதாகக்கூறி தன் மனைவியிடம் கூறிவிட்டு சென்று வயலைப்பார்த்துவிட்டு வீட்டுக்குத்திரும்பியவர் மிகவும் படபடப்புடனும் சோர்வுடனும் காணப்பட்டார்.இதையடுத்து மனைவி முத்துலெட்சுமி அவரிடம் விசாரித்தபோது பயிர்கள் கரிகிவிட்டதாகவும் வாங்கிய கடனை எப்படி திருப்பிக்கொடுக்கப்போகிறேன் என்று சொன்னவர் திடீரென மயங்கிவிழுந்திருக்கிறார். இதையடுத்து அவரை உடனடியாக முத்துப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரது உடல்நிலை மோசமாகவே தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.இதையடுத்து உடலை தம்பிக்கோட்டை வடகாடு அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.தகவலறிந்ததும் பட்டுக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன்,சிபிஎம் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் மனோகரன்,மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்க செயலாளர் சுப்ரமணியன்,சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் விவசாயி நாராயணசாமி வீட்டுக்குச் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
தாசில்தாரிடம் விவசாயிகள் கோரிக்கை
பட்டுக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரனிடம் விவசாயிகள் சார்பாக காவிரி தஞ்சை கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜராமலிங்கம் கோரிக்கை வைத்தார்.இதில் தம்பிக்கோட்டை வடகாடு பழைய பாட்டுவனாச்சி கடல் கழிமுக வாய்க்கால் தூந்து போய் சம தரையாக உள்ளது.வாய்க்காலின் இருபுறமும் கரை அமைக்காததால் கடல் நீர் உட்புகுந்து வருடாவருடம் சுமார் 100 ஏக்கர் சாகுபடி நிலம் வீணாகிவிடுகிறது.இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்யும் ஏழை குத்தகை விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனவே கடல் நீர் உள்ளே வராமல் தடுக்கநடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம், கிரெசண்ட் பிளட் டோனார்ஸ், மற்றும் தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து பொதுமருத்துவ முகாம் சாரா திருமண மண்டபத்தில்; நடைபெற்றது. நடைபெற்ற முகாமில் லயன்ஸ் சங்கத்தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக்; தலைமை வகித்தார். சங்க செயலாளர் முத்துகிருஷ்ணன் சங்க பொருலாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை மண்டலச் செயலர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், தொடங்கிவைத்தார். இதில் வாட்டார தலைவர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் கிரெசண்ட் பிளட் டோனார்ஸ், நிர்வாகிகள் கலந்துகொண்டார் இதனையடுத்து தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்றவர்களை உடல் எடை, இருதய நோய் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆகியவைக் குறித்து முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 385 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Subscribe to:
Posts (Atom)