
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் செங்காங்காட்டை சேர்ந்தவர் லோகநாதன் இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார். அவர் திருச்சி விமான நிலையத்துக்கு வருவதை அறிந்த அவரது குடும்பத்தினர்
ஒரு காரில் திருச்சிக்கு சென்றனர். அவர்கள் லோகநாதனை அழைத்துக்கொண்டு காரில் வந்தனர். காரை செங்காங்காட்டை சேர்;ந்த மாரிமுத்து மகன் ரகு (வயது 22) என்பவர் ஒட்டி வந்தனர். இவர்கள் அனைவரும், அதிராம்பட்டினம் அருகே உள்ள பரக்கலக்கோட்டை பகுதியில் இன்று 31ந் தேதி அதிகாலையில் வந்துக்கொண்டிருந்தனர் அப்போது கார் டிரைவர் தூங்கிவிட்டதாக தெரிகின்றது. நிலை தடுமாறி போன கார் ரோட்டோரம் இருந்த பனைமரம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த டிரைவர் ரகு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். மேலும் காரில் வந்த லோகநாதன் உள்ளிடோர் காயமடைந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அதிராம்பட்டினம் போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான ரகு உடலை மீட்டனர்.மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.