அதிரையில் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டெம்போ வேன் தீப்பிடித்ததால் பரபரப்பு

Posted March 27, 2016 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினத்தில் இண்டேன் எரிவாயு கம்பெனி உள்ளன. இக்கம்பெனியை தஞ்சாவூரை சேர்ந்த சென்னியப்பன் மகன் பாலசுப்பிரமணியன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் கம்பெனியில் இருந்து சிலிண்டர்களை வெளியூர்களுக்கு டெம்போ மூலம் சப்ளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் (26ந்தேதி)
 பட்டுக்கோட்டையில் கேஸ் சிலிண்டர்களை சப்ளை செய்துவிட்டு, மாலை  மாளியக்காடு கிராமம் அருகே டெம்போ வந்துக்கொண்டிருந்தன.அந்த டெம்போவை பட்டுக்கோட்டை துரௌபதை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டிரைவர் ராஜேஸ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். திடிரென்று டெம்போ தீ பிடித்து எரியத் தொடங்கின.உடனே அதிராம்பட்டினம் போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. உடனே பட்டுக்கோட்டை தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. உடனே சம்பவ இடத்திற்கு வந்து எரிந்துக்கொண்டிருந்த டெம்போவை தீயனைப்பு துறையினர் அணைத்தனர். டெம்போவில் காலியான சிலிண்டரும்,  கேஸ் நிரப்பிய சிலிண்டரும்  இருந்ததாக தெரிகின்றன. வண்டியை ஓட்டி வந்த டிரைவர் ராஜேஸ் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார் அந்த வழியாக சென்ற அனைத்து பேருந்துகளும் மாற்று வழியில் அனுப்பி வைத்தனர்




0 comment(s) to... “அதிரையில் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த டெம்போ வேன் தீப்பிடித்ததால் பரபரப்பு”