அதிரை சேர்மன் உள்ளிருப்பு போராட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு

Posted March 01, 2016 by Adiraivanavil in Labels:


அதிராம்பட்டினம்  பேரூராட்சிக்கு உட்பட்ட  மேலத்தெரு நடுத்தெரு நடுத்தெரு மேல்புரம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த 3 வாரங்களாக குடிநீர் சரியாக வரததால் இந்த பகுதியினர் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இதனையடுத்து புகாரின் பேரின் பம்பில் பழுது ஏற்பட்டுவுள்ளது, இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு
குடிநீர் சரியாக வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் அளித்த உறுதியின்படி இன்று வரை குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை இதனால் அதிருப்தி அடைந்த இந்த பகுதியினர் அதிராம்பட்டினம்  சேர்மன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில் ஏற்படும் நிர்வாக அலுவலர்களின் தாமதத்தை கண்டித்து போராட்டம் நடந்தது. இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் நீடித்தது இந்த போராட்டத்தில் அதிரை சேர்மன் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.










0 comment(s) to... “அதிரை சேர்மன் உள்ளிருப்பு போராட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ”