அதிரையில் பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

Posted March 02, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினத்தில் மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் குடிநீரை பெற்று மேலத்தெரு நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும் .இந்நிலையில்
மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள பம்ப் திடீரென பழுது ஏற்பட்டதால் இந்த பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வழங்குவதில் தாமதம் ; ஏற்பட்டது .இந்நிலையில்  பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு நடுத்தெரு நடுத்தெரு மேல்புரம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த 3 வாரங்களாக குடிநீர் சரியாக வரததால் இந்த பகுதியினர் சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இதனையடுத்து புகாரின் பேரின் பம்பில் பழுது ஏற்பட்டுவுள்ளது, இன்னும் சில தினங்களில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக வழங்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் அளித்த உறுதியின்படி இன்று வரை குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை இதனையடுத்து ஒரு மாதமாகியும் பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
500000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இந்த தொட்டிக்கு தண்ணீர் வரும் பம்ப் திடீரென பழுது எனக் கூறப்படுகிறது. எனவே ஒரு மாதம்; ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்
 இந்நிலையில் இப்பகுதிக்கு கடந்த 1 மாதத்திற்கும் மேலாக குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் விநியோகத்தை சீர் செய்ய கோரி பேரூராட்சி நிர்வாகத்தை பல முறை அணுகினால் மோட்டர் பிரச்னை காரணமாக தான் தண்ணீர் பிரச்னை உள்ளது என்கின்றனர். ஆனால் சரி செய்ய எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் குடிநீர் பிரச்சனையால் மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

ஏந்த பிரச்சனையும் பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தால் கண்டு கொள்வதில்லை. என்று கூறிகின்றனர்




0 comment(s) to... “அதிரையில் பயன்பாடின்றி கிடக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி”