பேராவூரணியை அடுத்த வீரியங்கோட்டை- உடையநாட்டில் அமிர்தசாமி கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் ராஜராஜன் நர்சரி-பிரைமரி பள்ளி 20 ஆம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சு.சிவசாமி, ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஊமத்தநாடு மல்லிகா அப்துல்ஜபார், வீரியங்கோட்டை ஏ.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி எஸ்.ஶ்ரீநிதி வரவேற்றார். அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் அ.மும்தாஜ் பேகம் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கோ.நிர்மலா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.சேக்தாவூது, என்.குலாம் கனி, கே.மதிவாணன், எம்.முகமது ரபீக், ஏ.ராஜமாணிக்கம், எஸ்.கமால்பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நிர்வாக அலுவலர் டி.பாலமுருகன் நன்றி கூறினார்.
விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
0 comment(s) to... “பள்ளி ஆண்டு விழா”