பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted March 04, 2016 by Adiraivanavil in Labels:
பேராவூரணி மார்ச்-4;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள வீரியன்கோட்டை-உடையநாடு ராஜராஜன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் விதமாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

        நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். உடையநாடு ஊராட்சி மன்றத்தலைவர் மல்லிகா அப்துல் ஜபார், வீரியங்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் .வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
       பேராவூரணி தர்ஷணா மருத்துவமனை டாக்டர் டி.நீலகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார். பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி 
தலைமையாசியர் கே.மதிவாணன், ஓய்வு பெற்ற தலைமையாசியர் என்.குலாம் கனி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்
             கண்காட்சியில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள், படைப்புகள், மூலிகைச்செடிகள், உணவுப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் .பாலமுருகன் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.




0 comment(s) to... “பள்ளியில் அறிவியல் கண்காட்சி ”