கடைத்தெருவில் குப்பைகளை அள்ளாத ஊராட்சி நிர்வாகம். மக்கள் அதிர்ப்தி.

Posted March 30, 2016 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தான் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெருவில் தேங்கும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் அள்ளுவது கிடையாது. இதனால் சாலைகள் முழுவதும் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் தேங்கி அசுத்தமாக காட்சி அளிக்கிறது. இதன் மூலம் தொற்று நோய்களும் பரவ வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து
ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்களிடம் பல முறை தெரிவித்தும் இப்பகுதியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குப்பைகளை உடனுக்குடன் அகற்றி மக்களின் அடிப்படை வசதிகளின் ஒன்றான சுகாதாரத்தை காக்க வேண்டும் என்று அப்பகுதி பெதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “கடைத்தெருவில் குப்பைகளை அள்ளாத ஊராட்சி நிர்வாகம். மக்கள் அதிர்ப்தி.”