பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாலிபால் போட்டி

Posted March 03, 2016 by Adiraivanavil in Labels:
பேராவூரணி பீட்டா ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாணவர்களிடத்தில் விளையாட்டில் ஆர்வம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முகமாக 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கான கையுந்துப்பந்து லீக் போட்டிகள்
27.02.2016 அன்று  நடைபெற்றன. 15 பள்ளிகளைச்சேர்ந்த சுமார் 200 மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.  அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு பன்னீர்செல்வம் போட்டிகளை துவங்கி வைத்தார்.  அகாடெமியின் துணைத்தலைவர் கே.ஆர். குகன் , வாலிபால் கோச் பாரதிதாசன், அருண், மற்றும் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் முன்னிலை வகித்தனர். ஆண்கள் பிரிவில் பெருமகளுர் மேனிலைப்பள்ளி முதலிடத்தையும் செருவாவிடுதி உயர்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், மூவேந்தர் பள்ளி மூன்றாமிடத்தையும் பொன்காடு நடுநிலைப்பள்ளி நான்காமிடத்தையும் பெற்றனர்.  பெண்கள் பிரிவில் பேராவூரணி மகளிர் மேனிலைப்பள்ளி முதலிடத்தையும்  மூவேந்தர் பள்ளி இரண்டாமிடத்தையும்செருவாவிடுதி உயர்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும் செந்தலை  நடுநிலைப்பள்ளி நான்காமிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பைகள்  மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேராவூரணி வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் போட்டிகளை சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் உடற்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணதாசன் நன்றி கூறினார்.




0 comment(s) to... “பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாலிபால் போட்டி”