பேராவூரணி மார்ச்-2;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செ.ராமநாதனுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அன்னை காந்திமதி கலை மன்றத்தின் சார்பாக டாக்டர் A.P.J.அப்துல் கலாம் விருதினை அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் வழங்கினார்.
இதனையொட்டி விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வீரம்மாள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ரெங்கநாதன், பட்டுக்கோட்டை அறிவியல் உதவிதொடக்கக்கல்வி அலுவலர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் செ.ராமநாதனுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அன்னை காந்திமதி கலை மன்றத்தின் சார்பாக டாக்டர் A.P.J.அப்துல் கலாம் விருதினை அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் வழங்கினார்.
இதனையொட்டி விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் வீரம்மாள் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ரெங்கநாதன், பட்டுக்கோட்டை அறிவியல் உதவிதொடக்கக்கல்வி அலுவலர்
இரா .இரவிச்சந்திரன், மழலையர் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயக்குமார், பேராவூரணி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் சதாசிவம் மற்றும் கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மீனாசுந்தரி ஆகியோர் பாராட்டி பேசினார்கள். இவ்விழாவில் பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
0 comment(s) to... “விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு”