குடிநீர் கேட்டு பெண்கள் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை பரபரப்பு
Posted March 02, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு கருமாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வருவது கிடையாது. சமீப காலமாக 8 நாட்களுக்கு ஒரு முறை ஒருவரது வீட்டிற்கு 2 குடம் மட்டுமே தண்ணீர் வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலரிடமும் குடிநீர் பராமரிப்பு பணியாளரிடமும் பலமுறை புகார் தெரிவித்து வந்தனர்
. ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. சமீபத்தில் கடும் வெயில் மற்றும் வரட்சியாக உள்ளதால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிர்ப்தி அடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அப்பகுதி தேவி என்பவரது தலைமையில் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்தில் தலைவர் மற்றும் செயல் அலுவலர் மற்றும் முக்கிய அலுவலர்கள் இல்லாததால் பேரூராட்சி 3-ம் நிலை அலுவலர் ராஜப்பா போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்களிடம் உடனடியாக சம்மந்தப்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அனைத்து பெண்களும் அங்கிருந்து சென்றனர்.
படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை0 comment(s) to... “குடிநீர் கேட்டு பெண்கள் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை பரபரப்பு”