அதிரையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கடைகள் ஏலம்-ஒரு கடைக்கு மாத வாடகை தொகை 26 ஆயிரத்திற்கு 200க்கு போனது

Posted March 04, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் 24 கடைகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டன. இந்த கடைகளை பல வருடங்களாக ஏலம் விடாமல் இருந்து வந்தன.அதன்பிறகு கடைகள் ஏலம் விடப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று (3ந் தேதி)  காலை 11மணிக்கு செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டன.

  ஏலத்தில் கலந்துக்கொள்வர்கள் ஒவ்வொரு நபர்களும் டேவணித் தொகையாக ரூ.1இலட்சம் பேரூராட்சி பெயரில் வரைவேலை எடுக்கப்பட்டன. மொத்தம் 115 பேர்கள் வரைவேலை எடுத்திருந்தனர். எந்தவித அசம்பாவிதம் நடைப் பெறமால் இருக்க பொது மக்களையும், பத்திரிக்கையாளர்களையும் வெளியில் அனுப்பி முன் வாசலில் போலிசார் பூட்டு போட்டு தடுத்துவிட்டனர்.
  இதில் உள்நோக்கத்துடன் வாடகைதொகையை ஏற்றிவிட வியாபாரம் செய்யாதவர்கள் அதிகம் கலந்துக்கொண்டனர்.அதன்படி அதிக பட்சமாக மாத வாடகையாக ரூ.26,100க்கும் குறைந்த வாடகையாக 10 ஆயிரத்து 200 வரை கடைகள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம்,செயல் அலுவலர் முனியசாமி மற்றும் ஊழியர்கள் கலந்துந்கொண்டனர்.இந்த கடைகள் ஏலம் பெரும் எதிர்பார்ப்புடன் நடந்தன. 



0 comment(s) to... “அதிரையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் கடைகள் ஏலம்-ஒரு கடைக்கு மாத வாடகை தொகை 26 ஆயிரத்திற்கு 200க்கு போனது”