அதிரையில் ஒரே தென்னை மரத்தில் ஒன்பது கிளைகள் உள்ள அதிசய தென்னை மரம்.

Posted April 01, 2016 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிரமத்தில் வசித்து வருபவர் நடராஜன் சங்கீதா தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் மா மரம், பலாமரம் , வாழைமரம் மற்றும் 250க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வைத்து வளர்த்து வருகின்றனர். இவர்கள் தோப்பில் உள்ள ஒரு தென்னை மரம் கடந்த வருடம் மரத்தின் தலைபகுதியில் கிளை வெடித்து இரண்டு கிளைகள் வந்துள்ளது. அதன் பிறகு அந்த மூன்று கிளைகளில் இருந்தும் இரண்டு கிளைகள் வீதம் வெடித்து தற்போது ஒரே தென்னை மரத்தில் ஒன்பது கிளைகளுடன் ஒரு தென்னை மரம் இருப்பது அந்த பகுதி விவசாயிகளிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஒவ்வொரு புதிய குருத்து தவிர மற்ற கிளைகள் அனைத்திலும் பாலை விட்டு காய்கள் காய்ப்பது வியப்பினை ஏற்படுத்துகிறது.
அது பற்றி மதுக்கூர் வேளாண்மை அலுவலர் நவீன் சேவியரை தொடர்புகொண்டு கேட்டபோது. ஒரு மரத்தில் இரண்டு கிளைகள் இருக்கும் அதிலும் ஒரு கிளைதான் காய்க்கும் , இதில் மூன்று கிளைகள் முளைத்து, அதிலிருந்து தலா இரண்டு கிளைகள் வந்து ஒவ்வொன்றும் காய்ப்பது அதிசயமாக இருக்கிறது. இந்த தகவலை வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தெரிவித்து ஆய்வு செய்ய போவதாக கூறியவர். இது பெரும்பாலும் மரபனு மாற்றத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்றார்.

படங்கள் செய்திகள்;

Indhirajith MarimuthuRaja 


0 comment(s) to... “அதிரையில் ஒரே தென்னை மரத்தில் ஒன்பது கிளைகள் உள்ள அதிசய தென்னை மரம்.”