அதிரை அருகே வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி
Posted April 12, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
அதிராம்பட்டினம் ஏப்ரல்-12;
அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற மனித சங்கிலியில் பேராவூரணி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜ் தலைமையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கோ.இரகுராமன்,
பாஸ்கர் ஆகியோர் முன்னிலையிலும் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் கார்காவயல் முதல் சேதுபாவாசத்திரம் வரை சுமார் 8 கிராமங்களை சேர்ந்த ஏறத்தாழ 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ,தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. "100 சதவீதம் வாக்களிப்போம். நேர்மையாக வாக்களிப்போம். எங்கள் வாக்கு விற்பனைக்கல்ல. வாக்களிக்க பணம் பெறுவதும் குற்றம். கொடுப்பதும் குற்றம். ஜனநாயக கடமையை நேர்மையாக ஆற்றுவோம்" என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தஞ்சை மாவட்டம் முழுவதும்
8 சட்டமன்ற தொகுதிகளையும் இணைக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்லணை முதல் தஞ்சாவூர் வரை, அணைக்கரை முதல் சேதுபாவாசத்திரம் வரை இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comment(s) to... “அதிரை அருகே வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி ”