
அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்திற்கு மீன் வாங்குவதற்க்கு மாளியக்காட்டை சேர்ந்த இருவர் பைக்வந்து மீன் மார்கெட்டில் மீன் வாங்கிவிட்டு தனது ஊருக்கு திரும்ப செல்ல சாலையை கடக்க முயன்றபோது சேதுபாவாசத்திரத்தை வழியாக வந்த வெளியூர் கார் ஓன்று அவர் மீது பயங்கரமாக மோதியது இதில் பின்னால் இருந்தவர் 4 அடி மேலே பறந்து கிழே விழுந்தார் இதில் அவருக்கு காலில் பலத்த அடிபட்டு கால் முறிந்தது...உடனே அருகில் இருந்த சகோதரர்கள் அவரை தூக்கி மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்ற ஆம்புலன்சில் அவரை ஏற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டது இதனையடுத்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது .