அதிராம்பட்டினத்தில் காஸ்டிக்சோடா தொழிற்சாலை
Posted April 11, 2016 by Adiraivanavil in Labels: தேர்தல்களம் 2016
தஞ்சை, ஏப். 11:
சேதுபாவாசத்திரத்தில் இறால் ஏற்றுமதி மையம், அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கiயில் கூறப்பட்டுள்ளது. மேலும் தஞ்சையில் கோளரங்கத்துடன் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மேலும் சில அம்சங்கள் வருமாறு:
பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். பட்டுக்கோட்டையில் பாதாளசாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
பட்டுக்கோட்டை அரசுப்பொதுமருத்துவமனை தரம் உயர்த்தப்படும். மாயனூர் புதிய கட்டளை உயர் மட்டக்கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் விரிவாக்கக்கால் வாய் ஆகிய வற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பட்டுக்கோட்டையில் தொடங்கப்பட்ட வணிகவளாகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். கல்லணைக்கால் வாய், காவிரி ஆறு, வெண்ணாறு மறு சீரமைப்புப்பணி மேற்கொள்ளப்படும். பட்டுக்கோட்டை வட்டம் வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் முழு நேரவிவசாயிகள் பயிற்சி மையம் தொடங்கப்படும். பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில்வர் ஜின் ஆயில் ஆலை தொடங்கப்படும். பட்டுக்கோட்டை தென்னை வணிகவளாகத்தில் தேங்காய் எண்ணெய் அரவை ஆலை அமைக்கப்படும். பேராவூரணி கூட்டுக்குடி நீர்த் திட்டத்தில் பட்டுக்கோட்டையும் சேர்க்கப் படும்.
அதிராம்பட்டினத்தில் உப்பு சார்ந்த காஸ்டிக் சோடா தொழிற் சாலை அமைக்கப்படும். தஞ்சையில் கோளரங்கத்துடன் கூடிய அறிவியல் மையம் அமைக்கப்படும். மதுக்கூர் பேரூராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். பட்டுக்கோட்டை வட்டம் கண்ணனாறு வடிகால் - வடவாறு நீட்டு வாய்க்கால் நீரேற்றுப் பாசனத் திட்டம் நிறைவேற்றப்படும். சேதுபாவாசத்திரத்தில் இறால் ஏற்று மதி மையம் அமைக்கப்படும். மராட்டியர் காலத்தில் கட்டப் பட்ட மனோரா சீரமைக்கப்பட்டு, சுற்றுலா தலமாக அறிவிக்கப்படும்.
சேதுபாவாசத்திரத்தில் மீன் பிடி உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற் சாலை அமைக்கப்படும். தஞ்சாவூரில் இயற்கை வேளாண்மை மையம் அமைக்கப்படும். சோளகம் பட்டி, அயனாபுரம் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். மல்லிப்பட்டிணத்தில் மீன் பிடித்துறை முகம் அமைக்கப்படும். கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எம் ஆர்ஐ ஸ்கேன் வசதி செய்து தரப்பட்டு தரம் உயர்த்தப்படும். கும்பகோணம் அருகில் அண்ணலக்ரஹாரம் - மாத்தி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். பாபநாசத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படும். உத்தமதான புரத்திலுள்ள தமிழ்த் தாத்தா உ.வே.சாமி நாதஅய்யர் அவர்களின் நினைவு இல்லம் புதுப்பிக்கப் பட்டு, காப்பாளர் நியமிக்கப்பட்டு பராமரிக்கப்படும்.தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுமார் 350க்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தஞ்சையில் கோளரங்கத்துடன் அறிவியல் மையம்
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
0 comment(s) to... “அதிராம்பட்டினத்தில் காஸ்டிக்சோடா தொழிற்சாலை”