வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி

Posted April 02, 2016 by Adiraivanavil in Labels:

பேராவூரணி ஏப்ரல்-2;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள ரெகுநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி நடத்தப்பட்டது.
     வியாழன் அன்று ரெகுநாதபுரம் கிராமத்தில் தமிழக தேர்தல் கமிஷன் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பதினெட்டு வயது நிறைவடைந்தோர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கோலப்போட்டி 
நடத்தப்பட்டது. 
      பேராவூரணி தொகுதி தேர்தல் நடத்தும் தலைமை அலுவலர் நாகராஜன், உதவி தேர்தல் அலுவலர்கள் ரகுராமன், பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினர். உதவி தேர்தல் அலுவலரும் பேராவூரணி வட்டாட்சியருமான கோ.இரகுராமன் பேசுகையில், " பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் பெரியநாயகிபுரத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச்சாவடியும், தொகுதியில் 4 இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படும். மேலும் ஊனமுற்றோர் வாக்களிக்க வசதியாக வீல் சேர் வசதியும், சாய்வுதள படிகளும் ஏற்பாடு செய்யப்படும். கோடை காலத்தை கருத்தில் கொண்டு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.
       நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் அழகேசன், வட்ட துணை ஆய்வாளர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர்கள் கவிதா, பாலசுப்பிரமணியம், கிராம நிர்வாக அலுவலர்கள் சீனிவாசன்,  கணே. மாரிமுத்து மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வாக்குப்பதிவு இயந்திரம் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது.



0 comment(s) to... “வாக்காளர் விழிப்புணர்வு கோலப் போட்டி ”