அதிரையில் பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம்
Posted April 10, 2016 by Adiraivanavil in Labels: தேர்தல்களம் 2016
அதிராம்பட்டினம், ஏப். 10-
அதிராம்பட்டினத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.தொகுதி பொறுப்பாளர் செம்பை கோவிந்தராஜ் தலைமை வகித்தார். மாவட்டஇளைஞர் அணி பொதுச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து தேசிய பொது செயலாளர் முரளிதரராவ், மத்திய இணைஅமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.இதில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் மது வினால் இளம் விதவைகள் அதிகரித்து வருகின்றனர். அதோடு தொடர் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. தரமற்ற கல்வியால் அரசு பள்ளிகள் மூடும் நிலை உருவாகி வருகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.மேலும் சென்ற காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு வீழ்த்தியது. பாஜ ஆட்சிக்கு வந்தவுடன் இது போன்ற செயல்கள் நடைபெறவில்லை. பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜவேட்பாளர் கருப்பு முருகானந்தத்துக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கு மாறு கேட்டுகொள்கிறேன் என்றார்.கூட்டத்தில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் நிறுவனர் தேவநாதன்,யாதவ் கோட்ட அமைப்பு செயலாளர் அய்யாரப்பன், மாவட்ட தலைவர் இளங்கோ, இந்திய ஜன நாயககட்சி ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் சூரை சண்முகம், பஞ்சாட்சரம், பிரகாஷ், ஒன்றிய தலைவர்கள் பழனிவேல், இளவரசன், நகர தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொது செயலாளர் பால்சாமி நன்றி கூறினார்.
0 comment(s) to... “அதிரையில் பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து பிரசாரப் பொதுக்கூட்டம்”