குடிநீர் கேட்டு மக்கள் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை. பரபரப்பு

Posted April 13, 2016 by Adiraivanavil in Labels:

 முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் 18-வது வார்டு பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். தற்பொழுது அங்கேயும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் தனியாரிடம் காசுக் கொடுத்து வாங்கும் நிலைமை உருவாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பேரூராட்சி சார்பில் இப்பகுதிக்கு குடிநீர் விணியோகம் செய்வதற்காக 13 லட்சம் செலவில் குழாய் அமைக்கப்பட்டது. தற்பொழுது அதனை செயல் படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் திருஞானம், செல்வராஜ், லட்சுமி, அமுதா ஆகியோர் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து பேரூராட்சி அலுவலகம் வந்த செயல் அலுவலர் செந்தில், போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களிடம் இன்னும் ஒரு வாரத்திற்குள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு குடிநீர் வழங்கப்படும் என்று உறுதி அளித்து பேசினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


படம் செய்தி:மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “ குடிநீர் கேட்டு மக்கள் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை. பரபரப்பு”