
அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் பகுதியில் வசிப்பவர் சித்ரவேல் சித்ரவேல் வயது 40 இவர் மீனவர் ஆவார். இவரது மனைவி இலஞ்சியம் 33 இவர்களுக்கு பிறந்த மணிகண்டன் சூர்யா காளிதாஸ் வழுதியம்மாள் ஜஸ்வர்யா ஆகிய 5 குழந்தைகள் உள்னர்
. சித்ரவேல் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வந்தார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து மது குடித்துவிட்டு செலவழித்து விட்டு வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது கணவன் மனைவிக்குள் சண்டைகள் நடந்துள்ளன. இதில் ஆத்திரம் அடைந்த சித்ரவேல் வலை பின்னல் பயன்படுத்தும் கத்தியை எடுத்து மனைவியின் நெஞ்சில் குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த இலஞ்சியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் இலஞ்சியத்தின் தங்கை முல்லையம்மாள் புகார் செய்தார். புகாரின் பேரில் அதிராம்பட்டினம் இன்ஸ்பெக்டர் மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இலஞ்சியம் உடலை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவான சித்ரவேலை தேடி வருகின்றனர். இந்த படுக்கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்மேனன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.