முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு

Posted April 12, 2016 by Adiraivanavil in Labels:
முத் துப்பேட்டை, ஏப். 12:
முத்துப்பேட்டை அருகே அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள் ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2 வகுப்பறை கொண்ட ஒரு பழமையான வகுப்பறை கட்டிடம் இருந்தது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொது மக்கள் பார்த்து அதிர்ச்சியைடைந்தனர். ஏனெனில் அந்த பழமையான பள்ளிகட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது, முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்த னர்.
இது குறித்து பொது மக்கள் விசாரித்ததில், இந்த வகுப்பறை கட்டிடத்தை அதிகாரிகள் துணையுடன் அப்பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பள்ளியின் பின்பக்க சுற்றுச்சுவரை இடித்து விட்டு அவ்வழியாக இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வகுப்பறை கட்டிடத்தை இடித் துள்ளனர். மேலும் வகுப்பறை கட்டிடம் இருந்த பின் பக்க சுற் றுச்சுவரும் இடிக்கப்பட் டுள் ளது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி கூறுகையில், பள்ளி வளாகத்தில் இருந்த 2 வகுப் பறை கொண்ட பழமையான கட்டிடம் பழுதடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வகுப் பறை கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரை மட்டமானது. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பிறகு சிறிது நேரத்தில் யூனியன் ஆபிசில் சொன்னதாக கூறி யாரோ சிலர் வந்து கட்டிட கழிவுகளை வாகனத்தில் அள்ளி சென் றனர் என்றார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பள்ளி வகுப் பறை கட் டி டம் இடிப் பது குறித்து எந்த அனு ம தி யும் பெற வில்லை. இது கு றித்து கலெக் ட ருக்கு தக வல் தெரி வித் துள் ளோம். இது கு றித்து விசா ரணை நடத்தி வரு கி றோம் என் றார்.
கூடு தல் உதவி தொடக் கக் கல்வி அலு வ லர் சுப் பி ர ம ணி யன் கூறு கை யில், இது கு றித்து இது வரை எந் த வித தக வ லும் வர வில்லை என் றார்.
அப் ப குதி திமுக ஒன் றிய கவுன் சி ல ரின் கண வர் ஜாம்பை கல் யா ணம் கூறு கை யில்: எந் த வித முன் அனு ம தி யும் இல் லா மல் அத் து மீறி ஒரு அரசு பள்ளி கட் டி டத்தை இடித்து தரை மட் ட மாக் கப் பட் டுள் ளது. இது கு றித்து கேட் டால் யாரும் முறை யான பதில் தர வில்லை. இது கு றித்து அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார்.


0 comment(s) to... “முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு”