சமையல் அறை,  – மீன் குழம்பு

சமையல் குறிப்பு – மீன் குழம்பு
க‌டல் உணவுகளில் மிகையாக கிடைப்ப‍தும், அதீத சத்துமிக்க‍து மீன் என்றால் அது மிகையாகாது. அந்த மீனை வைத்து
மீன் குழம்பு வைப்ப‍து எப்ப‍டி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
மீன் – 1 கிலோ 
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 3
பூண்டு – 13
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 12
தேங்காய் பூ – 4 டி ஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன் 
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லி  – 3 டேபிள் ஸ்பூன் 
வெந்தயம் – 1 டி ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1/2 டி ஸ்பூன்
கருவேபிள்ளை – 2 கொத்து 
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. மீனை நன்கு கழுவி எடுத்துகொள்ளவும். புளியை தண்ணிரில் ஊற வைக்கவும். 1/2 லிட்டர் தண்ணீரை தனியாக எடுத்து கொதிக்கவைத்து கொள்ளவும்.
2. சோம்பு ,சீரகம், மல்லி, 3 பூண்டு, 5 சின்ன வெங்காயம், தேங்காய் பூ இவற்றை எண்ணெய்யில் பொன்னிறமாக வறுத்து, நெய் போல் அரைத்து கொள்ளவும்.
3. 12 காய்ந்த மிளகாய், 1 தக்காளி இவற்றையும் அரைத்து வைத்து கொள்ளவும் .
4.அகன்ற பாத்திரத்தில் 1 கரண்டி எண்ணையை உற்றவும், அதில் வெந்த யம், 10 பூண்டு, 10 சின்னவெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு அதில் 2 தக்காளி, 2 பச்சை மிளகாய், மஞ்சள் தூள், அரைத்து வைத்திற்கும் இரண்டு பேஸ்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும் .
5. தேவையான அளவு கொதிக்க வைத்த தண்ணீரை அதில் சேர்க்கவும். புளியையும் கரைத்து அதில் சேர்க்கவும். தேவையான அளவு உப்பை சேர்க்கவும் .15 நிமிடம் வேக விடவும்.

6.எண்ணை பிரிந்து வந்ததும் மீன் துண்டுகளைபோடவும். மீன் வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கருவேபில்லையை கில்லி போட்டு,1 கரண்டி எண்ணெய்யை மேலாக ஊற்றவும். சுவையான மீன் குழம்பு தயார் .
 லாவன்யா லோகேஷ்

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் (அட்மா) பயிர் வகைப் பயிர்களின் விதை கிராம திட்டப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.               
புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சித் தலைவர் வி. வெங்கடாசலம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சுப்பையா முன்னிலை வகித்தார்.
இதில் தஞ்சாவூர் விதை அலுவலர் ராஜேந்திரன் பேசுகையில், விதை உற்பத்தி செய்யும் முறை, விதைப்பண்ணை அமைப்பதற்கான வழிமுறைகள், உளுந்து சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியன குறித்து விளக்கினார்.
தஞ்சாவூர் வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ந. இளஞ்செழியன் பயிர்வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் தொழில் நுட்பங்கள், உளுந்து ரகங்கள் பற்றி எடுத்துரைத்தார்.
உதவி வேளாண் அலுவலர்கள் ஆர். ரீகன், சித்ரா, அட்மா திட்ட மேலாளர் சி. சுகிதா, உதவி தொழில்நுட்ப மேலாளர் வி. ரமேஷ், த. ரவி மற்றும் முன்னோடி விவசாயிகள் 40 பேர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் வாலிபர் பலிபட்டுக்கோட்டை அருகே கோட்டைபட்டினம் மீனவர் காலனியை சேர்ந்தவர் பாவாபக்ருதீன் (வயது 25).
சம்பவத்தன்று இவர், அதே ஊரை சேர்ந்த அசன் முகைதீன் (24) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். பண்ணவயல்நசுவினி ஆற்றுபாலம் பகுதியில் வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
அவர்கள் 2 பேரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாபக்ருதீன் இறந்தார். அசன் முகைதீன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்டில், 'நேரம்;' பிரச்னையால், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, தினசரி, சுமார்  100க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பஸ்கள், பல்வேறு வழித்தடங்களில் செல்கிறது. இதனையடுத்து டிரைவர்களுக்கு இடையேயும் மோதல் உருவாகிறது. பஸ் ஸ்டாண்டுக்குள், பஸ் புறப்படும் நேரத்தில் இருந்து, முன்பாக, இன்று காலையில் அதிராம்பட்டினத்திலிருந்து , பட்டுக்கோட்டைக்கு  தனியார் பஸ் அங்கேருந்து , 10.55 மணிக்கு பஸ் கிளம்பியபோது, முன்னால் வந்த அரசு பஸ் வந்துகொண்டிருந்தது அப்போது அரசு பஸ் டிரைவர் தனியார் பஸ் முன்பு மறைத்து குருக்கே நிறுத்தப்பட்டது இதனையடுத்த அரசு பஸ் டிரைவருக்கும், தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே 'நேரம்;' பிரச்னையால் தகராறு ஏற்பட்டது.; இருதரப்பினரும் கடுமையான சொற்களால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 10 நிமிட்ம் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
;





முத் துப் பேட்டை, ஜன. 31:
முத் துப் பேட்டை பகு தி யில் உள்ள நெல் கொள் மு தல் நிலை யங் க ளில் தின மும் ரூ.1 லட் சத் துக்கு மட் டுமே நெல் ெகாள் மு தல் செய் யப் ப டு வ தால் நெல் மூட் டை கள் தேக் க ம டைந் துள் ளன.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை பகு தி யில் முத் துப் பேட்டை, இடும் பா வ னம், தில் லை வி ளா கம், பின் னத் தூர், பாண்டி ஆகிய கிரா மங் க ளில் அரசு நேரடி நெல் கொள் மு தல் நிலை யங் கள் உள் ளது. இங்கு 40 கிலோ கொண்ட சி.ஆர்.ரக நெல் மூட்டை ரூ. 584க்கும், பி.பி.டி ரக நெல் மூட்டை ரூ.608க்கும் கொள் மு தல் செய் யப் பட்டு வரு கி றது.
இந் த நி லை யில் நெல் கொள் மு தல் நிலை யங் க ளில் தின மும் ரூ. 1 லட் சம் மதிப் புள்ள நெல்லை மட் டும் கொள் மு தல் செய் யும் படி உயர் அதி கா ரி கள் உத் த ர விட் டுள் ள தாக கூறப் ப டு கி றது.
இத னால் கொள் மு தல் நிலை யங் க ளுக்கு விவ சா யி கள் கொண்டு வந்த நெல் மூட் டை கள் கொள் மு தல் செய் யப் ப டா மல் அங் கேயே அடுக்கி வைக் கப் பட் டுள் ளன. சிலர் வாக னங் க ளி லேயே நெல் மூட் டை களை இறக் கா மல் வைத் துள் ள னர். கொள் மு தல் நிலை யங் க ளில் உள்ள அதி கா ரி கள் தங் க ளுக்கு வேண் டப் பட்ட முக் கிய விவ சா யி க ளின் நெல்லை முன் னு ரிமை கொடுத்து ெகாள் மு தல் செய் வ தா க வும் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
தனி யா ரி டம் நெல்லை விற் றால் அங்கு மூட் டைக்கு ரூ.100 குறை வாக கிடைக் கி றது. இத னால் விவ சா யி கள் கவலை அடைந் துள் ள னர். எனவே கொள் மு தல் நிலை யங் க ளில் தினந் தோ றும் கொள் மு தல் தொகையை உயர்த்தி அறி விக்க வேண் டும் என்று விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது குறித்து ஆலங் காடு ஊராட்சி மன்ற முன் னால் தலை வர் மோகன் கூறு கை யில், முத் துப் பேட்டை பகு தி யில் சமீ பத் தில் பெய்த மழை யால் பாதிக் கப் பட்ட விவ சா யி க ளின் மனதை மேலும் பாதிக் கும் வகை யில் அவர் க ளின் நெல் களை இப் ப கு தி யில் உள்ள அரசு நேரடி நெல் கொள் மு தல் நிலைய அதி கா ரி கள் குறை வான நெல்லை மட் டும் கொள் மு தல் செய்து வரு கின் ற னர்.
இத னால் விவ சா யி கள் தனி யார் நெல் கொள் மு தல் நிலை யத்தை நாடும் போது மிகப் பெ ரிய நஷ் டம் ஏற் ப டு கி றது. எனவே அரசு இதில் தனி கவ னம் செலுத்தி கொள் மு தல் தொகையை உயர்த்தி தர வேண் டும்.
இல் லை யேல் விவ சா யி களை ஒன்று திரட்டி போராட் டத் தில் ஈடு ப டு வோம் என் றார்.

தஞ்சை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பிப்ரவரி மாதம் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கும் மாதமாக அணுசரிக்கப்படும். இதுவரை மத்திய மண்டலத்தில் உள்ள அஞ்சலகங்களில் 2.9 லட்சம் கணக்குகள் இந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி மாதம் முழுவதும் மத்திய மண்டலத்தில் உள்ள 24 தலைமை அஞ்சலங்களிலும் செல்வமகள் சேமிப்பு கணக்குகள் தொடங்க சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும். தகுதியுடைய அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வங்கிகள், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் தகுதியுடைய பெண் குழந்தைகளுக்கு அதிக எண்ணிக்கையில் ஒரே நேரத்தில் அவர்களது அலுவலக வளாகத்திலேயே செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க விரும்புவோர் அருகே உள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்

வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின் முத்தான யோசனைகள்
வீடு வாங்க லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்ட முடியாது என்பதாலும், திரும்பக்
கட்டும் மாதத்தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச்சலுகை கிடைக்கி றது என்பதாலும் பலர் வீட்டுக்கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் 15 , 20 ஆண்டுகளுக்கு என வீட்டுக் கடன் வாங்கி இருந்தாலும் அதனை சராசரியாக எட்டு ஆண்டுகளில் கட்டி முடித்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டுக் கடனை தேர்ந்தெடுத்த காலம் வரை கட்டினால், கட்டும் வட்டி அதிகமாக இருக்கும். இதனை ஓர் உதாரணம் மூலம் பார்க்கலாம்.
* கடன் தொகை ரூ. 25 லட்சம்
*திரும்பக்கட்டும் காலம் 30 ஆண்டுகள் (360 மாதங்கள்)
* வட்டி: 10%
* மாதத் தவணை ரூ. 21,939
இங்கே வாங்கும் கடனோ ரூ.25 லட்சம் தான். ஆனால், அதற்கு கட்டும் வட்டியோ ஏறக்குறைய ரூ.54 லட்சம். (பார்க்க: அட்டவணை 1)

இப்படி கடைசி வரைக்கும் கடனைக் கட்டுவதற்கு பதில் சில உத்திகளைப் பின்பற்றி வட்டியைக் கணிசமாக மிச்சப்படுத்தலாம். அவை பற்றி…
(1) மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை அதிகரித்துக் கட்டுதல்!
மாதத் தவணை ரூ.21,939 என்பதற்கு பதில் கூடுதலாக மாதம் ரூ.3,061 அதிகரித்து ரூ.25,000 ஆக கட்டி வந்தால், வீட்டுக் கடன் 360 மாதங்களுக் கு பதிலாக 216-வது மாதத்திலே  முடிந்துவிடும். இங்கே வட்டிக்காக செல் லும் தொகை ரூ.29 லட்சம்தான். அதாவது, மாதம் ரூ.3,061 அதிகரித்து கட் டுவதன்மூலம் வட்டியில் ரூ.25 லட்சம் மிச்சமாகும்.(பார்க்க: அட்டவணை 2)
(2) ஆண்டு தோறும் தவணை அதிகரித்து கட்டுதல்!
முதல் ஆண்டு மட்டும் ஆரம்பத்தில் கட்டும் வீட்டுக்கடனுக்குரிய தவணை யை கட்டி விட்டு, அதன்பிறகு ஆண்டுதோறும் ஒருகுறிப்பிட்ட தொகை யை அதிகரித்து வரும்பட்சத்தில் வட்டி கணிசமாக மிச்சமாகும். அதாவது , முதல் ஆண்டு தவிர, அடுத்துவரும் ஆண்டுகளில் தவணையை மாதம் ரூ.5,000 வீதம் அதிகரித்து கட்டிவந்தால், வீட்டுக்கடன் 360மாதங்களுக்கு பதில் 103 மாதங்களிலேயே முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை சுமார் ரூ.15 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.38.5 லட்சம் மிச்ச மாகும். (பார்க்க: அட்டவணை 3)
(3) ஆண்டுதோறும் கூடுதல் தொகை கட்டுதல்!
வீட்டுக்கடன் தவணை தொகையை அப்படியே கட்டிவரும் நிலையில் இர ண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை அதிகரித்து வருவது மூலமும் வீட்டுக் கடனுக்கான வட்டியில் கணிசமாக ஒரு தொ கையை மிச்சப்படுத்த முடியும். உதாரணமாக ஒருவர், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கூடுதலாக அசலைக் கட்டிவருகிறார் என்றால், அவரது கடன் 159- வது மாதத்தில் முடிந்துவிடும். இங்கே வட்டிக்கு செல்லும் தொகை ரூ.19.21 லட்சம்தான். வட்டியில் சுமார் ரூ.34.77 லட்சம் மிச்சமாகும். (பார்க்க : அட்டவணை 4)
உங்களுக்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி வீட்டுக் கடனை விரைந்து அடைக்க முயலுங்கள்!
சா.ராஜசேகரன், 
நிதி ஆலோசகர், புதுச்சேரி. 
(விகடனில் எழுதியது)

152 நாட்கள் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் . . .

152 நாட்கள் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் . . .
நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் இந்த பூண்டில் மரு‌த்துவ குண‌ம் உண்டு. பூண்டை
வறுத்து சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. மேலும் அதீத ரத்த‍ அழுத்த‍நோயினால் பாதிக்க‍ப்பட்ட‍ வர்கள் இந்த பூண்டின் ஒன்றிரண்டு விழுதுகளை 152 நாட்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், அதீத ரத்த அழுத்தம் கட்டுப் பட்டு இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும் என்கிறது சித்த மற்றும் ஆயுர் வேத மருத்துவம்.

முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் மகாத்மாகாந்தி நினைவு தினத்தையொட்டி மூத்த குடிமக்கள் இயக்கம், தமிழ் இலக்கிய மன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், வர்த்தக கழகம் ஆகிய இணைந்து மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த நிர்வாகிகள், பள்ளி மாணவ–மாணவிகள் கைக்கோர்த்து மனித சங்கிலியாக நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர். இதில் தமிழ் இலக்கிய செயலாளர் ராஜ்மோகன், மூத்த குடிமக்கள் இயக்க தலைவர் சக்திவேல், செயலாளர் ராஜாராம், உதவி செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

கோடை காலம் நெருங்க சில மாதங்கள் இருந்தாலும், இப்போதிலிருந்தே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. அலுவலக பணியாளர்கள் பெரும்பாலானோர் குளுகுளு ஏ.சி.யில் அமர்ந்து கொண்டு தப்பிவிடுகிறார்கள். ஆனால் இல்லத்தரசிகள் அனல் கக்கும் வீட்டிற்குள்ளே மாட்டிக்கொள்கின்றனர். 

வெட்டி வேர் தடுப்பு

படுக்கை அறையில் ஏ.சி. பொருத்தப்பட்டிருந்தாலும், சமையல் அறை வெப்பத்தின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கிறது. இதுபோன்ற சூழ்       நிலையை சமாளிக்க சில வழிமுறைகள் உள்ளன. இவைகளை செயல்படுத்தினால் கிராமத்து வாழ்க்கையுடன் இணைந்த மனதிருப்தி கிடைக்கும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்களை பார்க்கலாம். 

தென்னை ஓலை, பனை ஓலை, வெட்டி வேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை வீட்டின் ஜன்னல்களிலும், பால்கனிகளிலும் தொங்கவிடலாம். இவை வீட்டின் உள்பகுதியை குளிர்ச்சியாக்குவதில் பங்கெடுத்துக்கொள்ளும். அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். அதிலும் வெட்டிவேர் தடுப்பு திரைகள் நல்ல பலனை கொடுக்கும்.

மேல்தளத்தில் குளிர்தன்மை

 தனி வீட்டில் வசிப்பவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வெப்பம் உள் நுழையாத அளவிற்கு மேல் தள பகுதியை மாற்றி அமைக்கலாம். மாடியின் மேல் தளத்தில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். அதனுள் தென்னை நார்களை போட்டு வைக்கலாம். 

அவை தண்ணீரை தக்க வைத்து வீட்டின் உள்ளே வெப்பம் இறங்குவதை தடுக்க உதவும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைக்காலம் முடியும்வரை நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைக்கலாம். மாலை வேளையில் மாடியின் தரையில் நன்றாகத் தண்ணீர்த் தெளித்துவிட்டு அமர்ந்தால் இதமாக இருக்கும்.

கூரை கொடுக்கும் குளிர்ச்சி

பொதுவாகவே கோபுரங்களை கொண்ட கட்டுமானங்களின் உள்ளே குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கூரை உயரமாக இருப்பதுதான். அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் கூரையின் உயரத்தை 12 அடி இருக்கும் வகையில் அமைத்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு உத்தரவாதம் கிடைக்கும். அப்படி கட்டமைக்கப்பட்டிருக்காத வீட்டிற்கு மர தடுப்புகளை பயன்படுத்தலாம்.

இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் மொசைக் டைல்ஸ் அல்லது சலவைக் கற்களைப் பதித்துவிடுகிறார்கள். இவை கோடைக்காலத்திற்கு ஏற்றவையாக இல்லாவிட்டாலும், பெரும்பாலான மக்களின் விருப்ப தேர்வாக இருக்கின்றன. 

மர தடுப்புகள்

இதுபோன்ற வீடுகளில் சுவரையும் தரையையும் இணைக்கும் வகையில் மரத்தினாலான தடுப்பை ஏற்படுத்தி வெளிப்பகுதியில் இருந்து கடத்தப்படும் வெப்பத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். மேலும் கூரையின் பால்சீலிங் அமைப்பிலும் மாற்றம் செய்யலாம். கோடை காலத்திற்கு ஏற்ப மரத்திலான பால்சீலிங் அமைப்பை ஏற்படுத்தலாம். இவை வெப்பத்தை கட்டுப்படுத்துவதோடு உள் அலங்காரத்திலும் மாறுதலை ஏற்படுத்திக் கொடுக்கும். 

மேலும் வீட்டில் உள்ளே இருக்கும் வெப்பத்தை வெளியேற்ற எக்ஸாஸ்ட் பேன்களை பயன்படுத்தலாம். இத்தகைய பேன்களை முகப்பு அறையிலும், படுக்கை அறையிலும், சமையல் அறையிலும் பொருத்தலாம். அதன் மூலம் வீட்டின் ஜன்னல்களின் வழியாகக் குளிர்ச்சியான காற்று வீட்டின் உள்ளே பரவுவதற்கு வழிவகை ஏற்படும். 

வண்ணங்களில் மாற்றம்

கோடைக்காலத்தில் சுவர் வண்ணங்களிலும் மாறுதலை செய்ய வேண்டும். அடர்த்தியான வண்ணங்கள் இருந்தால் அதனை வெளிர்நிற வண்ணங்களாக மாற்றி அமைக்கலாம். அவை வெப்பத்தாக்கத்தை தடுப்பதோடு வெளிச்சத்தையும், குளிர்ச்சி தன்மையையும் ஏற்படுத்தி கொடுக்கும். 

புதிதாக வீடு கட்டுபவர்கள் மேல்பகுதியில் ஆற்று மணலை பரப்பி அஸ்திவாரம் அமைத்தால் தரையில் குளிர்ச்சி தன்மை வெளிப்பட வழிவகை பிறக்கும். அதன் மூலம் அறையின் வெப்ப நிலையும் குறையக்கூடும். ஜன்னல்கள் அதிகம் இடம் பெற செய்வதும் வெப்பத்தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு துணை புரியும்.

தஞ்சை, கும்பகோணம் உள்பட 13 மையங்களில் இந்தியன் வங்கி கடன் முகாம் இன்று நடக்கிறது.

கடன் முகாம்

இந்தியன் வங்கியின் கும்பகோணம் மண்டல மேலாளர் பி.வீரராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

இந்தியன் வங்கி தஞ்சாவூர் ஜங்சன், ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் மெயின், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, மன்னார்குடி, வேதாரண்யம், நாகப்பட்டினம், தென்பாதி(சீர்காழி) ஆகிய 13 கிளைகளை மையங்களாக கொண்டு 85 கிளைகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் முகாம் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. முகாமில் வீடு, வாகன மற்றும் சொத்து அடமான கடன்கள் வழங்கப்படுகிறது. மேலும் வீட்டு மனை வாங்குவதற்கும், புதிய வீடு கட்டுவதற்கும், வீடு வாங்குவதற்கும், பழுதுபார்ப்பதற்கும், வேறு நிதி நிறுவனங்களில் உள்ள வீட்டு வசதி கடனை மாற்றி கொள்ளவும் கடன் வழங்கப்படுகிறது.

ஆவணங்கள்

கடன்பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் அடையாள அட்டை மற்றும் முகவரி சான்று, சம்பளப் பட்டியல் அல்லது கடந்த 3 ஆண்டுகளுக்கு வருமானவரி செலுத்திய படிவம், வீடு பற்றிய ஆவணங்களின் நகல்கள், வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். ரூ.75 லட்சம் வரை வாங்கும் கடனுக்கு மிக குறைந்த வட்டி விகிதமாக 9.65 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

வீட்டுக்கடனை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்கள் சம்பள பட்டியல் அல்லது கடந்த 3 ஆண்டுகளுக்கு வருமான வரி செலுத்திய படிவம், பிற நிறுவனத்தில் வழங்கிய அனுமதி கடிதம், கடந்த 2 ஆண்டுகளின் மேற்கூறிய கடன் கணக்கின் விவரம் ஆகிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் கும்பகோணம் மண்டல அலுவலக கடன் பிரிவு மற்றும் அருகிலுள்ள இந்தியன் வங்கி கிளைகளை அணுகி தெரிந்து கொள்ளலாம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

விமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே அமைக்கிறார்களே அது ஏன்? – ஓரரிய தகவல் – வீடியோ

விமானத்தின் உள்ளே ஜன்ன‍ல் வட்ட‍வடிவமாக மட்டுமே அமைக்கிறார்களே அது ஏன்? – ஓரரிய தகவல் – வீடியோ

சின்ன‍ சின்ன‍ விஷயங்கள் கூட  பெரிய பெரிய விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன• அதுபோன்ற
விபத்துக்களின்போதுதான் அந்த சின்ன‍சின்ன‍ விஷயங்களி ல் இருக்கும் தவறுகள் நமக்கு தெரியவருகின்றன• அந்த வகையில் ஒரு விமானத்தினுள் இருக்கும் ஜன்ன‍ல்களை ஏன் வட்ட‍ வடிவமாக அமைக்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
1950க்குப் பிறகு அதிக பயணிகளை ஏற்றி செல்வதற்காகவும், வேகமாக செல்வதற் காகவும் பெரிய விமானங்கள் தயாரிக்கப் பட்டன. இங்கிலாந்தைச் சேர்ந்த டி ஹாவி லாண்ட் நிறுவனமும் இதுபோன்ற பெரிய விமான ங்களை உற்பத்தி செய்தது.
ஆனால் ஒரே வித்தியாசம், வட்டமான ஜன்னல்களுக்கு பதிலாக சதுரஜன்னல்களை கொண்ட விமானங்களை அந்நிறுவனம் தயாரித்தது. 1953-ல் அந்த நிறுவனத்தின் 2 விமானங்கள் வானில் உடைந்து விபத்துக்குள்ளானது. இதில் 53பேர் பலி யானார்கள். இந்த விபத்துக்கான சதுர ஜன்னல்களே காரண மாக இருந்துள்ளது.
ஜன்னலின்முனைப்பகுதி மற்றஇடங்களைவிட வலு குறை ந்ததாகஇருக்கும். சதுரவடிவிலான ஒருஜன்னலில் 4 முனை கள் இருக்கும். பல சதுர ஜன்னல்களை கொண்ட 1 விமானம் வானில் பறந்து கொண்டிருக்கும்போது காற்றினால் ஏற்படு ம் அழுத்தம் காரணமாக உடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவேதான் விமானங்களின் ஜன்னல்கள் எப்போதும் வட்ட மாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
=>சூசை அலெக்ஸாண்டர்




இஞ்சிச்சாற்றை பாலோடு கலந்து குடித்தால் உங்க உடல் எடை குறையுமுங்க‌!
உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறுமூலம் சுத்தப்படுத்தப்படுகி றது. பெரும் பாலான
நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத் துணர்ச்சியை தருகிறது. இஞ் சியின் மருத்துவக் குணங்களி ல் முக்கியமான ஒன்று உடலி ன் செரித்தலை துரிதப்படுத்து தல் ஆகும். அதனால்தான், அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள் ளைப்பூண்டும், இஞ்சியும் அதிகளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.  இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோ ஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்றுநாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலை யில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவரதொப்பை எனும் பெரு வயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இது , வானவில்  இணையத்தின் பதிவுஅல்ல‍


டெல்லி: மத்திய பெட்ரோலியத்துறையால் சமையல் கேஸ் சிலிண்டருக்கான பணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவ்வசதியை பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிமுகப்படுத்தினார். www.mylpg.in என்ற வலைத்தளத்தில் இவ்வசதியை பெறலாம் என்று அறிமுக நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார். புதிய எரிவாயு இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் வசதியை கொண்டு வருமாறு எண்ணெய் நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கேஸ் சிலிண்டருக்கு இணையதளம் வழியாக பதிவு செய்யும் வசதி ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது அதே வழியில் பணம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை  சாப்பிட்டு வந்தால் . . .

மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை  சாப்பிட்டு வந்தால் . . .
இயற்கையாக கிடைக்க‍க் கூடிய இந்த பேரிச்சம் பழங்களை உட்கொள் ளும் நமக்கு எண்ணிலங்டங்கா பயன்களையும் பலன்களை கொடுக்கும். நல்ல தரமான கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை எடுத்து
ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவிட்டு, சுத்த‍மான அசல் தேனை, அப்பழங்கள் மூழ்கும்படி, ஊற்றி மூடி விடவேண்தும். மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்.

சமையல் அறை – இறால் பிரியாணி (செய்முறை)

சமையல் குறிப்பு – இறால் பிரியாணி (செய்முறை)
மட்ட‍ம் பிரியாணி, சிக்க‍ன் பிரியாணியைப்போலவே இறால் பிரியாணி மிகவும்
சுவையாக இருக்கும். அது எப்ப‍டி சமைப்பது எப்ப‍டி என்பதை பார்ப்போம்.
தேவையானவை:
இறால் – கால் கிலோ
அரிசி – அரை கிலோ
எண்ணை- 150 கிராம்
டால்டா – 1 ஸ்பூன்
நெய் –ஒரு ஸ்பூன்
வெங்காயம் – 3
தக்காளி- 4
பச்ச மிளகாய் – 4
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞசள் – கால் ஸ்பூன்
உப்பு – தே.அளவு
எலுமிச்சை – ஒன்று
கொத்தமல்லி தழை –கால்கட்டு
புதினா – ஒரு கொத்து
பட்டை, ஏலக்காய் ,கிராம்பு –தலா ஒன்று
சிகப்பு கலர் பொடி –ஒரு பின்ச்
செய்முறை:
எண்ணையை காய வைத்து பட்டை,கிரம்பு , ஏலக்காய் ஆகியவற்றை போட்டு அதனுடன் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கொத்தமல்லி புதினா, தக்காளி , பச்ச மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும். தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேகவிடவும்.
இப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேகவிட்டு அதில் அரை தேக்கரண் டி எண்ணை, எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்டவேண்டும். கொட்டி தம்மில் விடவேண்டும் தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.
சிறிதுகஞ்சி தண்ணீரில் சிகப்புகலர் பொடியை கரைத்துமேலே தூவினால்போ ல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் விட வேண்டும்.
=> முகம்ம‍து


புதுடெல்லி, 
உலகின் ‘டாப்–50’ பணக்காரர்கள் பட்டியலை ‘வெல்த்–எக்ஸ்’ அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸ் முதலிடம் பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு 87.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் கோடி) ஆகும்.
இந்த பட்டியலில் 3 இந்தியர்களும் இடம்பெற்று உள்ளனர். அதன்படி ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 24.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 66 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சொத்துகளுடன் 27–வது இடத்தை பிடித்துள்ளார்.
விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி (16.5 பில்லியன் டாலர்) 43–வது இடத்தையும், சன் பார்மா அதிபர் திலிப் சங்வி (16.4 பில்லியன் டாலர்) 44–வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் அதிக அளவாக அமெரிக்கர்கள் 29 பேர் இடம் பெற்றுள்ளனர். சீனர்களை பொறுத்தவரை 4 பேர் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இதில் மிகவும் இளவயது கோடீஸ்வரராக பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் இடம்பெற்றுள்ளார். பட்டியலில் 8–வது இடத்தை பிடித்துள்ள இவரது சொத்து மதிப்பு 42.8 பில்லியன் டாலர் ஆகும்.

முத் துப் பேட்டை, ஜன. 29:
கவுன் சி லர் கள் உட் கா ரும் நாற் கா லி களை குப்பை வண் டி யில் எடுத்து வந் ததை கண் டித்து அதி முக கவுன் சி லர் ரக ளை யில் ஈடு பட் ட தால் பர ப ரப்பு ஏற் பட் டது.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட் டை யில் ஒரு தனி யார் திரு மண மண் ட பத் தில் கடந்த வாரம் அர சின் இல வச பொருட் கள் வழங் கும் விழா நடந் தது. இதில் அமைச் சர் காம ராஜ் கலந்து கொண் டார். இதற் காக முத் துப் பேட்டை பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கவுன் சி லர் கள் அம ரும் நாற் கா லி கள் கொண்டு செல் லப் பட்ன. இந் நி லை யில் நேற்று பேரூ ராட்சி கூட் டம் நடந் தது. இதற் காக துப் பு ரவு பணி யா ளர் கள் நாற் கா லி களை குப்பை ஏற் றும் மினி லாரி யில் பேரூ ராட் சிக்கு கொண்டு வந் த னர். அப் போது அங் கி ருந்த அதி முக கவுன் சி லர் நாசர் ஆத் தி ரம் அடைந்து, குப் பை கள் ஏற் றும் லாரி யில் நேற் று தான் செத்த நாய் க ளை யும், பன் றி க ளை யும் எடுத் துச் சென் ற னர். அதே லாரி யில் எங் க ளது நாற் கா லி க ளை யும் எப் படி ஏற்றி வர லாம். பள் ளி வா சல் க ளுக்கு செல் லும் நாங் கள் எப் படி அந்த நாற் கா லி க ளில் அமர முடி யும். இது எங் களை கேவ லப் ப டுத் து வது போல் உள் ளது என்று கூறி பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கடும் ரக ளை யில் ஈடு பட் டார். அரு கில் இருந் த வர் கள் அவரை சமா தா னப் ப டுத் தி னர்.
எதிர்ப்பால் தண்ணீரில் கழுவினர்
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட் டை யில் ஒரு தனி யார் திரு மண மண் ட பத் தில் கடந்த வாரம் அர சின் இல வச பொருட் கள் வழங் கும் விழா நடந் தது. இதில் அமைச் சர் காம ராஜ் கலந்து கொண் டார். இதற் காக முத் துப் பேட்டை பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கவுன் சி லர் கள் அம ரும் நாற் கா லி கள் கொண்டு செல் லப் பட்ன. இந் நி லை யில் நேற்று பேரூ ராட்சி கூட் டம் நடந் தது. இதற் காக துப் பு ரவு பணி யா ளர் கள் நாற் கா லி களை குப்பை ஏற் றும் மினி லாரி யில் பேரூ ராட் சிக்கு கொண்டு வந் த னர். அப் போது அங் கி ருந்த அதி முக கவுன் சி லர் நாசர் ஆத் தி ரம் அடைந்து, குப் பை கள் ஏற் றும் லாரி யில் நேற் று தான் செத்த நாய் க ளை யும், பன் றி க ளை யும் எடுத் துச் சென் ற னர். அதே லாரி யில் எங் க ளது நாற் கா லி க ளை யும் எப் படி ஏற்றி வர லாம். பள் ளி வா சல் க ளுக்கு செல் லும் நாங் கள் எப் படி அந்த நாற் கா லி க ளில் அமர முடி யும். இது எங் களை கேவ லப் ப டுத் து வது போல் உள் ளது என்று கூறி பேரூ ராட்சி அலு வ ல கத் தில் கடும் ரக ளை யில் ஈடு பட் டார். அரு கில் இருந் த வர் கள் அவரை சமா தா னப் ப டுத் தி னர்.
இதைக் கேள் விப் பட்ட பேரூ ராட்சி செயல் அலு வ லர் குலோத் துங் கள் எடுத்து வரப் பட்ட அனைத்து நாற் கா லி க ளை யும் கழுவி சுத் தம் செய்ய உத் த ர விட் டார். அதன் படி பேரூ ராட்சி பணி யா ளர் கள் நாற் கா லி களை தண் ணீ ரால் கழுவி சுத் தம் செய் த னர். இதன் பின் பேரூ ராட்சி கூட் டம் நடந் தது.

முத் துப் பேட்டை, ஜன. 29:
ஜாம் பு வா னோடை சேக் தா வூது ஆண் ட வர் தர்கா கந் தூரி விழா வை யொட்டி நேற்று கொடி மரம் நடும் விழா நடந் தது.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை அடுத்த ஜாம் பு வா னோடை சேக் தா வூது ஆண் ட வர் தர்கா மிக பிர சித்தி பெற் றது. இங்கு 714ம் ஆண்டு பெரிய கந் தூரி விழா வரும் பிப் ர வரி 9ம் தேதி துவங் கு கி றது. 14 நாட் கள் நடை பெ றும் இந்த விழா வில் தமி ழ கம் மற் றும் பல் வேறு மாநி லங் க ளி லி ருந் தும் லட் சக் க ணக் கான மக் கள் கலந்து கொள் வார் கள்.
இதை முன் னிட்டு புனித கொடி மரம் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற் றது. காலை 7 மணிக்கு தாவு தியா பள் ளி வா ச லில் மவு லுது ஓதப் பட் டது. 8.30க்கு தர் கா வில் சிறப்பு பிரார்த் தனை மற் றும் பல் வேறு நிகழ்ச் சி கள் நடந் தது. பின் னர் தர் கா வி லி ருந்து ஊர் வ ல மாக கொடி மர மேடைக்கு சென்று தர்கா முதன்மை அறங் கா வ லர் பாக் கர் அலி சாகிப் உரை நிகழ்த் தி னார். தர்கா மவு லவி ஜக் க ரி யா சா கிப் புனித துவா ஓதி பிரார்த் தனை செய் தார். காலை 9.30 மணிக்கு வான வே டிக்கை, அதிர் வேட் டு டன் புனித கொடி மரம் நடப் பட் டது. இதில் டிரஸ் டி கள் தமீம் அன் சாரி சாகிப், நூர் மு க மது சாகிப் மற் றும் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர்.



 முத் துப் பேட்டை அடுத்த ஜாம் பு வா னோடை சேக் தா வூது ஆண் ட வர் தர் கா வில் வரும் பிப் ர வரி 9ம் தேதி கந் தூரி விழா துவங் கு கி றது. இதை யொட்டி நேற்று தர் கா வில் கொடி மரம் நிலை நிறுத் தப் பட் டது.

உலகம் முழுவதும் ‘ஜிகா’ வைரஸ் என்ற புதிய கிருமி பரவி வருகிறது. இதுவும் டெங்கு காய்ச்சல் போலவே, ‘ஏடிஸ்’ வகை கொசுக்களால் ஏற்படும். இதற்கு தடுப்பூசி கிடையாது. இதுவரை யாரும் குணமானது இல்லை.
ஜிகா வைரஸ்
ஒருபுறம் விஞ்ஞானம் வளர வளர, மறுபுறம் புதிய புதிய நோய்க்கிருமிகளும் உருவாகி வருகின்றன. டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். 1947–ம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது.
சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மூளை பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள்
பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3 ஆயிரத்து 500 குழந்தைகள் இதுபோன்று பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தொடக்க காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருந்ததால், மூளை பாதிப்புக்கும், அதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழவில்லை. சமீபகாலமாகவே, இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால், கர்ப்பிணி பெண்களின் தொப்புளை தாக்கும் ‘ஜிகா’ வைரஸ், அதன்வழியாக, கருவில் இருக்கும் சிசுவின் மூளைக்கு செல்லக்கூடியது.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
‘ஜிகா’ வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது.
இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. அதனால், மத்திய அரசு எந்த உஷார் நடவடிக்கையும் பிறப்பிக்கவில்லை.
இருப்பினும், கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு தனது சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதார இயக்குனர் வாமதேவா கூறியதாவது:–
டெங்கு, சிக்குன்குனியாவுக்கு எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகளே இதற்கு போதுமானவை. டெங்கு தாக்கியவர்களின் ரத்த மாதிரி ‘ஜிகா’ வைரஸ் சோதனைக்கும் அனுப்பப்படும். இதற்காக, புனேவில் உள்ள தேசிய தொற்றுநோய் பரிசோதனை நிலையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குளிர் காலத்தில், இந்நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்றபோதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏடிஸ் கொசுக்கள்
டெங்கு, சிக்குன்குனியாவைப் போலவே, ‘ஜிகா’ கிருமியும், ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. இந்த வகை கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பாத்திரம், டயர் போன்றவற்றில் தேங்கி உள்ள நன்னீரில், இக்கொசுக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். ஆகவே, பாத்திரங்களை மூடி வைக்குமாறும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
‘ஜிகா’ வைரஸ் தாக்கினால், டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகளே காணப்படும். அதாவது, ஒரு வாரத்துக்கு கடுமையான காய்ச்சல் நீடிக்கும். தோலில் கொப்புளம் ஏற்படும். கண்கள் சிவந்து விடும். மூட்டு வலி, உடல் அசதி, தலைவலி ஏற்படும்.
தடுப்பு முறைகள்
இதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க, உடல் முழுவதும் மூடும் வகையில் ஆடை அணிய வேண்டும். ஜன்னல்களில் திரை போட்டிருக்க வேண்டும். பகல் நேரத்திலும், ஜன்னல் மற்றும் வீட்டு கதவை மூடி வைத்திருக்க வேண்டும். கொசு வலைக்குள்தான் படுத்து தூங்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

ணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத்தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப்பொருள்  விலை

சிமெண்டு

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)*            ரூ.390

50 கிலோ பை (சில்லரை விற்பனை)*    ரூ.410

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்*    ரூ.36,400

டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் *    ரூ.34,900

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்*    ரூ.39,600  

செங்கல்–மணல் 

செங்கல் 3000 எண்ணிக்கை*    ரூ.19,000 

ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை 

ஜல்லிக்கல் (ஒரு கன அடி) 

12 மி.மீ.     ரூ. 28 

20 மி.மீ.    ரூ. 35 

40 மி.மீ.    ரூ. 30 

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10)    ரூ.22,533

கிரேடு 60/70 (வி.ஜி.30)    ரூ.23,333

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார்    ரூ.550 முதல் 650 வரை    

சித்தாள் ஆண்    ரூ.400 முதல் 450 வரை

சித்தாள் பெண்    ரூ.300 முதல் 350 வரை

பெயிண்டர்/பிளம்பர்    ரூ.500 முதல் 550 வரை 

கார்பெண்டர்    ரூ.550 முதல் 650 வரை 

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 20–1–2016 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.

* கடந்த வாரம் 8 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி ரூ.37,100–க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் ரூ.36,400 ஆக குறைந்துள்ளது.

* கடந்த வாரம் 10–25 மி.மீ விட்டம் டி.எம்.டி. இரும்பு கம்பி விலை ரூ.35,600 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.34,900 ஆக விற்பனையாகிறது.

* கடந்த வாரம் கிரேடு 80/100 (ஜி.பி.10) தார் விலை ரு.24,673 ஆக இருந்தது. அது இந்த வாரம் ரூ.22,533 ஆக குறைந்துள்ளது. 

* கடந்த வாரம் ரூ.25,473–க்கு விற்பனை செய்யப்பட்ட கிரேடு 60/70 (வி.ஜி.30) தார் இந்த வாரம் ரூ.23,333 ஆக விற்பனையாகிறது.

பொது இடங்களில் ஆதரவற்ற குழந்தைகளை கண்டால், ‘1098’ என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு, சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

3 ஆயிரம் குழந்தைகள்

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி அனைத்து மாநிலங்களிலும் காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டுபிடிக்க ‘‘புன்னகையை தேடி’’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறைகள் மற்றும் காவல்துறை அலுவலர்களை உள்ளடக்கிய ஐந்து குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் போன குழந்தைகள் தேடப்பட்டனர்.

அந்த வகையில் இந்தியா முழுவதும் சுமார் 3 ஆயிரம் குழந்தைகள் பேருந்து நிலையம், கோவில்கள், சுற்றுலா தலங்கள், சாலையோரங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில் பெரும்பாலான குழந்தைகள் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

122 குழந்தைகள்

இந்த ‘‘புன்னகையை தேடி’’ திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதை தொடர்ந்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காணாமல் போன மற்றும் ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை தேடும் பணியாக ‘‘புன்னகையை தேடி’’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அப்போது சென்னையில் 122 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

அதனைத் தொடர்ந்து, ‘‘புன்னகையை தேடி’’ திட்டமானது கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக தமிழகத்தில் காவல் துறை மற்றும் அரசு சாரா அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவில்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆதரவின்றி திரியும் குழந்தைகள் இருப்பின் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 

‘1098’ கட்டணமில்லா தொலைபேசி

ஆதரவற்ற மற்றும் காணாமல் போன குழந்தைகளின் வாழ்வு ஒளிமயமானதாக அமைய பொதுமக்கள் தங்கள் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ ஆதரவற்ற குழந்தைகளை கண்டால் உடனடியாக ‘1098’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் கொடுக்கலாம் அல்லது அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .
சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில்
மிகமுக்கிய குறிப்பிடவேண்டிய இடம் எதுவென்றால், சர்க்க‍ரை டப்பாதா ன். என்ன‍தான் சர்க்கரை டப்பாவில் போட்டு அழு த்த‍மான மூடியைக்கொண்டு மூடி வைத்தாலும், எறும்புகள் அதில் மொய்த்து விடுகின்றன• இத னால் காபி,டீ போடும்போது அதில் சர்க்க‍ரையை கலக்கும்போது இந்த எறும்புகள் காபி, டீ-யில் கலந்துவிடுகிறது. இத னால் கணவர் குழந்தைகள் மற்றும் உறவினர்க ளிடம் தேவையற்ற‍ பேச்சுக்கள் வாங்க வேண்டி யுள்ள‍து. இனிஇந்தகவலை உங்களுக்கு இல்லை
ஆம்! சர்க்கரையை போட்டு வைத்திருக்கும் டப்பாக்களில் 5, 6 கிராம்புகளை போட்டுவைத்து பாருங்கள். கிராம்பின்வாடைக் கு எறும்புகள் வரவே வராது. நீங்களும் மற்ற‍வர்களுக்கு சர்க்க‍ரை கலந்த காபி, டீ கொடுத்தீங்கன்னா அவர்கள் உங்களை திட்ட‍வேமாட்டாங்க‌. அட‌ எறும்புகள் இருந்தா ல் தானே  திட்டுவார்கள். அதா எறும்புகளே இல்லையே அப்புறம் எப்ப‍டி?