முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மகன்
அரவிந்தன்(19) இவர் இந்தாண்டு திருச்சி தனியார் கல்லூரியில் பால்டெக்னிக் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார். இந்தநிலையில் நேற்று மாலை தனது வீட்டில் மின் மோட்டார் பழுதடைந்ததை அரவிந்தன் சரிசெய்துக்கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாரவிதமாக மோட்டாரில் மின்சாரம் பட்டு அரவிந்தனை தாக்கியது இதில் தூக்கி வீசப்பட்ட அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானர். இதுக்குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள்
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை