அலையாத்தி காட்டில் சுற்றுலா பயணிகளை துரத்தும் தேனீக்கள். கட்டுப்படுத்த கோரிக்கை.

Posted May 13, 2015 by Adiraivanavil in Labels:
அலையாத்திக்காடு ஆசியாவிலிருயே மிகப் பெரிய காடாகும். தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் துவங்கி நாகை மாவட்டத்தில் முடியும் இந்த அலையாத்தி சுமார் 120 கிலேர் மீட்டர் தூரம பரப்பளவில் பரந்து விரிந்து வளர்ந்து கம்பீரமாக காணப்படுகிறது. 2004 சுனாமியின் போது
முதலில் இந்த அலையாத்தி காட்டைதான் சுனாமி தாக்கியது. இதில் இங்கு அமைந்துள்ள அலையாத்திக்காட்டால் முத்துப்பேட்டை பகுதி மக்கள் தப்பினர். மேலும் பல வகையான தாவர செடிகள் மற்றும் விதவிதமான ஆயிரக்கணக்கான இனப்பறவைகள் இங்கு ஒரே இடத்தில் காணப்படுவதால் இதனை காண இந்தியாவில் பல பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த காட்டின் பல பகுதிகளில் தேனீக்களின் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் முகாமிடும் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா வரும் பயணிகளை தேனீக்கள் துரத்தி துரத்தி கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேனீக்கள் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நல்ல தண்ணீர்களை கண்டால் அதில் மொய்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் தேனீக்களிடமிருந்து தப்பிக்க குடிநீர்களை சிறிய தட்டிலோ டம்ளரிலோ ஊற்றி வைத்தால் தேனிகள் அதில் மொய்கிறன. அந்த சமயங்களில் பயணிகளும் சமார்த்தியமாக தப்பிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்பொழுது அலையாத்தி காடுகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைய தொடங்கி உள்ளன. உடன் முத்துப்பேட்டை வனத்துறையினர் அலையாத்தி காடுகளில் முகாமிட்டுள்ள தேனீக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை எடுத்துள்ளனர். 

படம் செய்தி:நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை



0 comment(s) to... “அலையாத்தி காட்டில் சுற்றுலா பயணிகளை துரத்தும் தேனீக்கள். கட்டுப்படுத்த கோரிக்கை.”