அதிரை 3 வது வார்டில் கொசு தொல்லையால் தூக்கம் போச்சு. பொதுமக்கள் அவதி

Posted May 16, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் வண்ணங் குட்டையில் சாக்கடை நீர் தேங்கி, . அதில் குட்டையைச் சுற்றி செடி, கொடிகள், முள் மரங்கள் அடர்த்தியாக உள்ளது.
  அதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.   
சாக்கடை நீர் குட்டையின் துர்நாற்றத்தாலும், கொசு தொல்லையாலும்,
பொது மக்கள் பெரிதும் துன்பப்பட்டு வருகின்றனர்.

இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. குட்டையின் சுகாதார கேட்டால், மக்களை பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. கொசுவால் வரும் நோய்களை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் வேளையில்அதிராம்பட்டினம் பகுதியில் வண்ணங்குட்டையில் சாக்கடை நீர்  தேங்கி உள்ளது வருத்தப்படக் கூடியதாக உள்ளது.
இது மட்டுமின்றி ஆடு மாடுகள் குட்டையில் இறந்து விடுகின்றன

பொதுமக்கள் கூறுகையில்
 தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தெருக்களில் பரவுகிறது. கொசு தொல்லையால் தூக்கம் போச்சு. பலமுறை அதிராம்பட்டினம் பேரூராட்சியில் கூறியும், அதற்கான தீர்வு கிடைக்காதது ஏமாற்றமே, என்றனர். 





0 comment(s) to... “அதிரை 3 வது வார்டில் கொசு தொல்லையால் தூக்கம் போச்சு. பொதுமக்கள் அவதி”