அதிரையில் இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்-தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்! 28 அமைச்சர்களும் பதவியேற்றனர்

Posted May 23, 2015 by Adiraivanavil in Labels:
 தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இன்று காலை 11 மணிக்கு பதவியேற்றார். முதல்வர் ஜெயலலிதாவுடன் 28 புதிய
அமைச்சர்களும் பதவியேற்றனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற எம்.எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதல்வர் பதவியிலிருந்து விலகினார் ஓ.பன்னீர் செல்வம். இதனைத் தொடர்ந்து முதல்வராக பதவியேற்க வருமாறு ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.அதன்படி நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆளுநரைச் சந்தித்தார் ஜெயலலிதா. அப்போது ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மேலும் அமைச்சரவைப் பட்டியலையும் அவர் ஆளுநரிடம் கொடுத்தார்.. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் துறை விவரங்களை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 11 மணியளவில் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ரோசையா பதவி பிரமாணம் செய்துவைத்தார். அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சர்கள் 14, 14 பேராக ஒரே நேரத்தில் பதவியேற்றனர் இதையடுத்து அதிரையில் அண்ணா தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 











0 comment(s) to... “அதிரையில் இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்-தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்! 28 அமைச்சர்களும் பதவியேற்றனர் ”