, முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வைரன் சோலை கிராமத்தில் பசுமை நகர் என்ற பகுதியில் ஒரு கிருஸ்தவ அமைப்பு ஒரு இடத்தை வாங்கி அதில் கீற்று கொட்டகை அமைத்து கடந்த 15 தினங்களுக்கு
முன்பு ஏசுராஜ் என்பவர் தலைமையில் ஜபக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றினர். இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஜபக்கூட்டம் நடந்த போது பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்தும் அந்த கூட்டத்தை தடை செய்யக் கோரியும் அதன் முன்னால் மாவட்ட செயலாளர் குமரவேல் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் அமைப்பின் நிர்வாகி ஏசுராஜ் மற்றும் நிர்வாகிகளிடம் ஜபக்கூட்டம் நடத்த முறைப்படி அனுமதி பெற்ற பிறகுதான் நடத்த வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் முன்தினம் மீண்டும் ஏசுராஜ் தலைமையில் ஜபக்கூட்டம் நடத்தப்பட்டது. இதனை கேள்விப்பட்ட பா.ஜ.க மற்றும் கிராமமக்கள் ஏராளமானோர் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. உடன் சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி பா.ஜ.க மற்றும் கிராம மக்களை திருப்பி அனுப்பினர். மேலும் ஜபக்கூட்டம் நடத்தியவர்களையும் திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அம்பிகாபதி மகன் முரளி(35) என்பவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று கொடுத்துள்ளார். அதில் கிருஸ்தவ அமைப்பின் நிர்வாகி ஏசுராஜ் என்பவர் 3 ஆட்டோக்களில் தனது ஆட்களுடன் வந்து ஏன் இங்கே நிற்கிறாய்? என்றும் இங்கே நாங்கள் ஜபம் செய்ய போகிறோம். உனக்கு என்ன வேலை? என்ற தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுதார். இதனால் நானும் எனது குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் உள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை