இஸ்லாமிய பாராம்பரிய பூரியாம் பாத்திஹா விழா முத்துப்பேட்டை தர்காவில் நடைபெற்றது.

Posted May 16, 2015 by Adiraivanavil in Labels:
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சேக் தாவூது ஆண்டவர் தர்காவில் இஸ்லாமியர்களின் பாராம்பரிய பூரியாம் பாத்திஹா விழா சுமார் 100 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று
வருகிறது. ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய ரஜபு பிறை 22-ல் நடைபெறும் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தர்கா முக்கிய பொருப்பாளர்கள், அப்பகுதி இஸ்லாமியர்கள் கலந்துக் கொண்டு சிறப்பு பாத்திஹா ஓதி நிறைவு செய்யப்பட்டது. அதன் பின்னர் வருகைத்தந்தவர்களுக்கு இஸ்லாமிய பாராம்பரியத்துடன் தயாரிக்கப்படும் பெரிய அளவிலான பூரி, ரவாவில் தயாரிக்கப்படும் இனிப்பு கஞ்சி ஆகியவை பரிமாறப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை


0 comment(s) to... “இஸ்லாமிய பாராம்பரிய பூரியாம் பாத்திஹா விழா முத்துப்பேட்டை தர்காவில் நடைபெற்றது.”