திருச்சி சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்- ரூ.200 கோடி செலவில்
Posted May 17, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்
இந்த விரிவாக்க திட்டத்திற்கான நிதி அரசிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. அவை முழுமையடைந்ததும் ஆண்டு முழுவதும் திருச்சி விமான நிலையம் கையாண்டு வரும் பயணிகளின் எண்ணிக்கை 12 லட்சமாக அதிகரிக்கப்படும் என திருச்சி ஏர்போர்ட் இயக்குனர் பி.சி.எச்.நெகி தெரிவித்தார்.
முன்னதாக, அங்குள்ள புறப்பாட்டு முனையத்தில் பாதுகாப்பு வளைய பகுதியில் புதிய வசதிகளையும், 150 பயணிகள் கூடுதலாக அமரும் வகையில் இருக்கை வசதிகளையும் துவங்கி வைத்தார். பரபரப்பான நேரங்களில் முனையங்களில் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க இது உதவியாக இருக்கும். அதேபோல், இம்மாத இறுதிக்குள் புதிய கேண்டீன் ஒன்றும் திருச்சி ஏர்போர்ட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது. வேகமான காற்றையும் தாங்கக்கூடிய வகையில் ஏர்போர்ட்டின் கூரை கண்ணாடிக்கு பதிலாக உறுதியான பொருட்களால் மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
0 comment(s) to... “திருச்சி சர்வதேச விமான நிலையம் விரிவாக்கம்- ரூ.200 கோடி செலவில்”