அதிரையில்மக்கள் ஒத்துழைப்புடன் உண்ணா விரத போராட்டம் -முடிவுக்கு வந்தது

Posted May 16, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அரசு பொது மருத்துவமனை தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் தலைமையில் பொதுமக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரை
சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் .அதனை தொடர்ந்து அரசு தரப்பில் எந்த ஒரு முன்னேற்றம் இல்லாததை தொடர்ந்து 30.4.15 தேதி அன்று சாலை மறியலில் ஈடு பட போகுவதாக பேரூர் தலைவர் அஸ்லம் தரப்பில் அறிவிப்பு வெளியானது .இதன் எதிரொலியாக பட்டுக்கோட்டை வட்ட கோட்டசியர் தலைமையில் சாலை மறியல் தொடர்பாக  அமைதி பேச்சு வார்த்தை நடந்த பேரூர் தலைவர் அஸ்லம் அவர்களுக்கு 29.4.15  தேதி அன்று அழைப்பு வந்தது .பேரூர் தலைவர் அழைப்பை ஏற்று கொண்டு சமூக ஆர்வலர்கள் ,முஹல்லா ஜமாத்தார்கள் ,கிராம பஞ்சயதர்கள் ,பொது மக்கள் ஆகியோருடன் பட்டுக்கோட்டை கோட்டசியர் அலுவலகத்திற்கு சென்று அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார் .அதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட தஞ்சை சுகாதார இணை இயக்குனர் அவர்கள் அதிராம்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் வரும் 1-5-2015 தேதி முதல் இரவு நேர  மருத்துவர்கள் நியமிக்க படுவார்கள் என்று உறுதி மொழி அளித்ததின் பெயரில் சாலை மறியல் போரரட்டம் கைவிடப்பட்டது .ஆனால் அரசு தரப்பில் சொன்ன வாக்குறித்திகள் நிறைவேற்ற படவில்லை .இதனை தொடர்ந்து உண்ணாவிரத  போரரட்டத்தை நடத்துவதாக அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் ,மற்றும் சமூக ஆர்வலர்கள் முடிவு செய்தனர் .அதன் பின்னர் இன்று காலை அரசு மருத்துவமனை எதிரில் உண்ணாவிரத போராட்டம் 9:00 மணிக்கு தொடங்கியது .பொதுமக்கள் அதிகளவில் திரளாக கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர் .இதன் விளைவாக  பட்டுக்கோட்டை கோட்டசியர் , சுகாதார இணை இயக்குனர் மீனாஷி ,அரசு அதிகாரிகள் உண்ணாவிரத இடத்திற்கு வந்து அஸ்லம் அவர்களை சந்தித்து அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு அதிராம்பட்டினம்அரசு மருத்துமனை முழு நேர மருத்துவ வசதியுடன் இயங்க அரசு ஒப்புதல் ஆணையை    கொடுத்தனர் .இதனால் உண்ணாவிரத போராட்டம்  முடிவுக்கு வந்தது .எதிர் வரும் திங்கள் முதல் மருத்துவர்கள் நியமிக்கபடுவார்கள் என ஆணையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது ..இதில் முஹல்ல தலைவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ,மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்
















படங்கள் காளிதாஸ்----திருப்பதி




0 comment(s) to... “அதிரையில்மக்கள் ஒத்துழைப்புடன் உண்ணா விரத போராட்டம் -முடிவுக்கு வந்தது”