5 குழந்தையை வளர்க்க முடியாமல் வருமையில் வாடிய விவசாய கூலி தொழிலாளி தற்கொலை.

Posted May 22, 2015 by Adiraivanavil in Labels:
 முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி தெற்கு பள்ளியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் மகன்
அய்யாசாமி(46). இவர் விவசாயக்கூலித் தொழிலாளி இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளது. வருமையில் வாடிய இவர் 5 குழந்தைகளையும் வளர்க்க மிகவும் சிரமமம் பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இவரது மனைவி மீண்டும் நிறைமாத கர்ப்பணியாக உள்ளார். இதனால் மீண்டும் சிரமம் வருமே என்று கவலை அடைந்த அய்யாசாமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சிக்கொள்ளி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தற்கொலை செய்துக் கொண்ட அய்யாசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


0 comment(s) to... “ 5 குழந்தையை வளர்க்க முடியாமல் வருமையில் வாடிய விவசாய கூலி தொழிலாளி தற்கொலை.”