முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிராமத்தில் புகழ் பெற்ற அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. இங்கே ஸ்ரீதூண்டிகாரன், ஸ்ரீமின்னடியான், ஸ்ரீசப்த
கன்னிகள் சிலைகள் உள்ளன. இந்த கோவிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் திருப்பணி பணிகள் சில மாதங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு வந்த நிர்வாகிகள் பார்த்த போது கோவிலின் வாசலில் புதியதாக அமைக்கப்பட்ட மின்னடியான் சிலையின் கை மற்றும் இடுப்பு பகுதியை யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் சேதமாக்கிவிட்டு சென்றுள்ளது தெரிய வந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் கோவில் முன்பு திரண்டனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகிகள் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு சேதமாக்கிவிட்டு சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை