பட்டுக்கோட்டை அருகே குடும்ப தகராறில் 3 பேர் தற்கொலை முயற்சி
Posted May 10, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வெளியூருக்கு சென்றிருந்த இமானுவேல் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது இமானு வேலுக்கும், அங்கையர்கரசிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அங்கையர்கரசியும், தேவதர்ஷினியும் குருணை மருந்தை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்துவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இமானுவேலுவும் குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 3 பேரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேரும் எதற்காக தற்கொலைக்கு முயற்சி செய்தனர் என்பது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை அருகே குடும்ப தகராறில் 3 பேர் தற்கொலை முயற்சி”