12 வயது சிறுவனுக்கு நேராக நிற்காத, தொங்கிக் கொண்டிருக்கும் தலை. –
Posted May 17, 2015 by Adiraivanavil in Labels: தமிழகம்12 வயது சிறுவனுக்கு நேராக நிற்காத, தொங்கிக் கொண்டிருக்கும் தலை. – அறுவை சிகிச்சைக்கு தயாராகும் மருத்துவர்கள்
12 வயது சிறுவனுக்கு நேராக நிற்காத, தொங்கிக் கொண்டிருக்கும் தலை. – அறுவை சிகிச்சைக்கு தயாராகும் மருத்துவர்கள்
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் கழுத்து நேராக இல்லாமல் 180 டிகிரி கோணத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதை அறுவை சிகிச்சைசெய்து சரிசெய்ய
டாக்டர்கள் முன்வந்துள்ளனர். மத்திய பிரதேசமாநிலத்தில் உள்ள கிராம ம் ஒன்றைச் சேர்ந்தவர் முகேஷ் (40). அவரது மனைவி சுமித்ரா(35). அவர்களுக்கு லலித்(16), மகேந்திர அஹிர்வார், சுரேந்திரா(10) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அதில் மகேந்திராவின் கழுத்தில் உள்ள தசை வலு வில்லாததால் அவரின் தலை எப்பொழுதும் தொங்கியபடியே உள்ளது. அவரது தலைமார்பு அல்லது தோள் மீது தான் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் படித்துவிட்டு டெல்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கிருஷ்ண ன் மகேந்திராவுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து அவரது தலை யை கழுத்தில் வைக்க முன்வந்துள்ளார். இது குறித்து கிருஷ்ணன் கூறு கையில், நான் மகேந்திரனை பரிசோதனை செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அது முடிந்த பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கழுத்தை நேராக்குவேன். தலைகீழாக இல்லாமல் இந்த உலகை நேராக அவர் பார்க்க நான் உதவி செய்வேன் என்றார்.
கிருஷ்ணன் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்தாலும் மருத்துவ மனை மற்றும் மருந்து செலவுகளை மகேந்திராவின் பெற்றோர்தான் கவனிக்க வேண்டும். ஏழ்மையில் வாடும் அவர்களால் இது முடியாததாக உள்ளது. இந்நிலையில் மகேந்திராவின் நிலைமை குறித்து அறிந்த இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலைச் சேர்ந்த ஜூலி ஜோன்ஸ் என்ற பெண் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் நிதி திரட்டியுள்ளார். தனது மகனுக்கு உதவ முன்வந்துள்ள டாக்டர் மற்றும் பிற தயாள குணம் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக மகேந்திராவின் தந்தை தெரிவித்துள்ளா ர்.=> ஒன் இந்தியா
0 comment(s) to... “12 வயது சிறுவனுக்கு நேராக நிற்காத, தொங்கிக் கொண்டிருக்கும் தலை. – ”