பேருந்து நிலைத்துக்குள் புகுந்து அரசு பேருந்து விபத்து. குடிமகன் படுகாயம். டிரைவரின் சமார்த்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
Posted May 22, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை ஊரிலிருந்து வேளாங்கன்னிக்கு செல்லும் அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை 3 மணிக்கு பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி செம்படவன் காடு அருகே சென்றுக் கொண்டிருந்த போது பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த காளிமுத்து(60) என்பவர் கடும் குடிபோதையில் திடீரென்று சைக்கிளில் சாலையின் குறுக்கே சென்றார். இதனை கண்ட அரசு பேருந்து டிரைவர் அவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார். அப்பொழுது பேருந்து நிலைத்தடுமாறி சாலை ஓரம் உள்ள பேருந்து நிலையத்துக்குள் புகுந்தது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அப்பொழுது பேருந்தை ஓட்டிய டிரைவர் ஆப்ரகாம் சுதாரித்து கொண்டு சமார்த்தியமாக பயணிகள் மீது மோதாமல் பேருந்து நிலையம் கட்டித்தின் மீது மோதி நிறுத்தினார். இதில் பேருந்து முன்புரம் முழுவதும் சேதமானது. இதில் சாலையின் குறுக்கே வந்த குடிமகன் காளிமுத்துக்கு பலத்து காயம் ஏற்பட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் மேலப்பிடாகை பயணி லூசியா(60) மற்றும் ஒரு சில பெண்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பேருந்தை சமார்த்தியமாக இயக்கிய டிரைவர் ஆப்ரகானை பொதுமக்கள் பாராட்டினர். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


படம் செய்தி:
நிருபர்
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
0 comment(s) to... “பேருந்து நிலைத்துக்குள் புகுந்து அரசு பேருந்து விபத்து. குடிமகன் படுகாயம். டிரைவரின் சமார்த்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.”