மல்லிப்பட்டிணத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

Posted August 27, 2014 by Adiraivanavil in Labels:

சேதுபாவாசத்திரம், : விநாயகர் சதுர்த்தியையொட்டி மல்லிப்பட்டிணத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மல்லிப்பட்டிணத்தில் பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லப்பாண்டியன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் சேதுபாவாசத்திரம் செந்தில்குமார், பேராவூரணி அண்ணாதுரை, மதுக்கூர் முனியசாமி, திருச்சிற்றம்பலம் பழனிச்சாமி, தஞ்சை இன்ஸ்பெக்டர்கள் உட்பட 50 துணை ராணுவத்தினர், 30 காவலர்கள் கலந்து கொண்டனர். மல்லிப்பட்டிணம் கடை
வீதியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக மனோராவில் அணிவகுப்பு நிறைவடைந்தது.  மேலும் கூட்டத்தை கலைக்கும் வஞ்சிரா வாகனமும் அதிவேக அதிரப்படை வாகனமும் அணிவகுப்பில் இடம்பெற்றது. மல்லிப்பட்டிணம், புதுப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி இருதரப்பினரிடையே மோதல் ஏற்படுவதால் முன்னெச்சரிக்கையாக அணிவகுப்பு நடந்தது.நன்றி தினகரன்


0 comment(s) to... “மல்லிப்பட்டிணத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு”