100 நாள் வேலைதிட்ட நிதி திடீர் நிறுத்தம்: தமிழகத்தில் 12 லட்சம் பேர் பாதிப்பு
Posted August 03, 2014 by Adiraivanavil in Labels: தமிழகம்
கிராமப்புறத்தில் வேலை வாய்ப்பை பெருக்கவும், நலிவடைந்தவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் தேசிய அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு
அறிமுகப்படுத்தியது. ஆரம்ப காலத்தில் ரூ.80 என வழங்கப்பட்ட ஊதியம் 2014ம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.95 முதல் 148 ரூபாய் வரை வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை மற்றும் ஊதியம் பெற்றனர். இதனால் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். வறுமையில் வாடிய குடும்பத்தினருக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருந்தது. ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 முதல் 200 பேர் வரை ஆண்களும், பெண்களுமாக பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் இதன் மூலம் நடந்தன. இந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு வங்கிகளின் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆறுவார காலமாக பணி செய்ததற்கான பணம் வங்கியில் வரவில்லையாம். இது தொடர்பாக ஊராட்சி தலைவர்களும், பணியாளர்களும் அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஆறுவார காலமாக தமிழக அரசுக்கு வரவில்லை. அதனால் பணி செய்தவர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
அறிமுகப்படுத்தியது. ஆரம்ப காலத்தில் ரூ.80 என வழங்கப்பட்ட ஊதியம் 2014ம் ஆண்டு தொடக்கத்தில் ரூ.95 முதல் 148 ரூபாய் வரை வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராமப் பகுதிகளில் வசிப்பவர்கள் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை மற்றும் ஊதியம் பெற்றனர். இதனால் கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றனர். வறுமையில் வாடிய குடும்பத்தினருக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருந்தது. ஏழை மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 முதல் 200 பேர் வரை ஆண்களும், பெண்களுமாக பணியில் ஈடுபட்டனர். ஊராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் இதன் மூலம் நடந்தன. இந்த பணியில் ஈடுபட்டவர்களுக்கு வங்கிகளின் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆறுவார காலமாக பணி செய்ததற்கான பணம் வங்கியில் வரவில்லையாம். இது தொடர்பாக ஊராட்சி தலைவர்களும், பணியாளர்களும் அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஆறுவார காலமாக தமிழக அரசுக்கு வரவில்லை. அதனால் பணி செய்தவர்களுக்கு கூலி வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இத்திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் குமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகளில் சுமார் 10 ஆயிரம் பேர் பணி இழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 12,618 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு பெரிதும் பயன்பட்ட இத்திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். - நன்றி: தினகரன்
0 comment(s) to... “100 நாள் வேலைதிட்ட நிதி திடீர் நிறுத்தம்: தமிழகத்தில் 12 லட்சம் பேர் பாதிப்பு”