பட்டுக்கோட்டையில் வாலிபர் வெட்டிக் கொலை
Posted August 19, 2014 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை, ஆக. 19–
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேலக்கரம்பியம் சேனாதிபதி தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் அகிலன் (30) விவசாயத் தொழிலாளி.
நேற்று இரவு
10 மணியளவில் இவர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார்.
10 மணியளவில் இவர் மோட்டார் சைக்கிளில் பட்டுக்கோட்டைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார்.
மேலக்கரம்பியம் மாரியம்மன் கோவில் ஆர்ச் அருகே வந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வந்தனர். அவர்கள் அகிலனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.
உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அக்கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அகிலனை சரமாரியாக வெட்டினார்கள்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே இறந்தார். உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. (பொறுப்பு) ராஜா, இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரண நடத்தினார்கள்.
அங்கிருந்த தடயங்களையும் சேகரித்தனர். அகிலனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்தது. அகிலனுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜி என்கிற விஜயகுமாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அகிலனை கடந்த 2 வருடங்களுக்கு முன் விஜயகுமார் வெட்டி உள்ளார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
இந்த நிலையில் வேப்பங்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் கோமா நிலைக்கு ஆளானார்.
இந்த சம்பவத்தில் அகிலனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அவரை வெட்டிகொன்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். அகிலன் மீது பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அகிலனுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நன்றி மாலைமலர்
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் வாலிபர் வெட்டிக் கொலை”