அதிராம்பட்டினம் கல்லூரி நாட்களில் கூடுதல் பஸ் இயக்கவேண்டும்-மாணவர்கள் கோரிக்கை

Posted July 01, 2014 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம் பகுதியில் கலைக்கல்லூரி அரசு பொறியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர் பயிர்ச்சி பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அரசு உதவிபெறும் பள்ளி தனியார் பள்ளிகள் என பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் நாட்களில் காலை மாலை நேரங்களில் தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஒவ்வொன்றிலும் அதிகமான கூட்டம் இருக்கும் இதில் அனைத்து பஸ்களிலும் பஸ் படிகளில் மாணவர்கள் தொங்கியபடி செல்கின்றனர். இவ்வாறு அதிக நபர்களை ஏற்றிச்சென்ற ஒரு தனியார் பேருந்து ஒன்று சில மாதங்களுக்கு முன் அதிராம்பட்டினம் காளிகோவில் அருகே நிலை தடுமாறி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதனால் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலத்த காயமடைந்தனர் இந்நிலையில் இந்த சம்பவத்தைத்தொடர்ந்து பஸ்வசதி இல்லாததால் மாணவர்கள் தொடர்ந்து பஸ்களில் தொங்கியபடியே பயணம் செய்வது பார்பவர்கள் அனைவரையும் அச்சத்துக்குள்ளாக்குகிறது இது பற்றி கல்லூரி மாணவர்களள் கூறும்போது பொதுவாகவே அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமிருக்கும் இப்படி இருக்கையில் கல்லூரி நாட்களில் மாணவர்களும் பஸ்ஸில் ஏறிச்செல்லவேண்டியுள்ளதால் கூட்டம் மேலும் அதிகமாகி படிகளில் தொங்கவேண்டியுள்ளது இதனால் மாணவிகள் பல மணிநேரம் காத்திருந்து பஸ்ஸில் பயணம் செய்யவேண்டியுள்ளது எனவே பள்ளி கல்லூரி நாட்களில் கூடுதல் பஸ்கள் இயக்கினால் இந்த நிலை மாறும் மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும் என்றனர்.


0 comment(s) to... “அதிராம்பட்டினம் கல்லூரி நாட்களில் கூடுதல் பஸ் இயக்கவேண்டும்-மாணவர்கள் கோரிக்கை”